Saturday, July 19, 2025



அக்கறை தந்தாய்
 அளித்தாய் அளவற்ற அன்பை 
ஒவ்வொரு கணமும் விசாரிப்பு
காந்த சிரிப்பு 
புன்னகைக்கும் விழி
மந்திர குரல்
மலர்ந்த முகம் 
இவை எல்லாம் தந்த
நீ

ஒவ்வொன்றாய் நிறுத்தி கொண்டாய்
கரையில் போட்ட மீனை போல் துடிக்கின்றேன்.
ஒவ்வொன்றாய் தருவாயா மீண்டும் 
நீ(ர்) சேர்ந்து உயிர் பிழைக்க.

பூமி.சாமி.



No comments:

Post a Comment