நகராத உலகத்தில் நகரும் மேகத்தில் ஊர் செல்ல நினைக்கிறது,
இரயிலில் சன்னலோர இருக்கையில் கிராமத்திற்கு சென்று உறவுகளை பார்க்கிறது,
கல்லூரி சென்று வகுப்பெடுக்கிறது,
நண்பர்களிடமும் மாணவர்களிடமும் கதைக்கிறது,
நடுவெயிலில் தேனீர்க்கடைக்கு சென்று சமோசா சாப்பிடுகிறது,
பனிக்கால பேருந்து பயணத்தில் பாடல் கேட்கிறது,
அதிக்காலபொழுதில் பறவைகளின் இசையை கேட்கிறது,
நதியோர நிழலில் பசுமையினோடு நடக்கிறது,
இந்த 144 தடையும் குரோனாவும் உடலுக்குத்தான்,
என் மனம் குறைந்தபட்சம் நிமிடத்திற்கு 288 முறை எங்கும் அலைகிறது கட்டுபாடேயில்லாமல்.
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment