Sunday, July 25, 2010

எங்கள் மகன்(ள்)

மகள் என்றேன நான்

மகன் என்றாள் என்

மனைவி

ஆனால்

உங்களை மகள் போல்

பார்த்துகொள்வேன என்று

பிறந்தான் எங்கள் மகன்

புத்தகம்

புரட்ட புரட்ட தன்னை

அழுக்காக்கி கொண்டு

நம் மனதை தூய்மை

ஆக்குகிறது நல்ல புத்தகம் .

Monday, July 19, 2010

என்றும குழந்தை

பேருந்தில் பயண பட்டபொழுது

நடத்துனர் பயண சீட்டு வாங்க சொன்னார்

என் மகனுக்கும், அன்றுதான் உணர்தேன்

என் மகனுக்கும் மூன்று வயதானதை .
சரிகவி

கடல்

அலை அடித்து

அமைதி படுத்துகிறது

மனதை
. சரிகவி

Tuesday, June 29, 2010

" எந்த ஒரு கணவனும் தன் மனைவி குழந்தை

பிரசவிக்கும் நேரத்தில் அவள் எழுப்பும் கதறலை

கவனித்தான் என்றால் , அவன் வாழ்நாள் முழுவதும்

அவளை கண்கலங்காமல் பாதுகாப்பான்." சரிகவி
நாம் யாரும் ,எபோழுதும் முழு மை யாக

கைவிடப்பட்டவர்கள் அல்ல ; எந்த இருளும்

விடிவதற்கு சற்று நேரமே உள்ளது ;

கொஞ்சம் மனவலிமையும் , காத்திருக்கவும்

முடிந்தால் ,நாம் விடுபடவே முடியாத

துர்கனவு என்று நினைத்த விசயங்களிலிரிந்து

விடுபடலாம்
. மனுஷ்யபுத்திரன்

Sunday, June 27, 2010

நேர்மறை எண்ணம்

" இருள் என்பதும் மிகக் குறைந்த ஒளிதான் ". பாரதி