என் அம்மாவின் ஈடு இணையற்ற தியாகத்தை
என் அப்பாவின் அளவிடா முடியா உழைப்பை
என் வாழ்க்கை இணையின் அளப்பரிய அன்பை
என் குழந்தைகளின் ப்ரியத்தை
கூடப்பிறந்தவர்களின் அக்கறையை
என் உறவினர்களின் பாசத்தை
என் நண்பர்களின் உற்ற நேர உதவியை
என் மாணவர்களின் மரியாதையை
எல்லாவற்றையும் எளிதாக மறந்து கடந்து விடுகிறேன் நான்
ஆனால்
அவர்கள் எதையும் மறக்க கூடாது என சண்டையிடுகிறேன் நான்.
பூமி.சாமி.