பத்து நாட்களாக பாட்டு சத்தம் கேட்க வில்லை,
அதிகாலை எங்களை எழுப்புவதே அவர்களின் பாட்டுதான்,
குடும்பத்தை காலி செய்து விட்டு
எங்கோ சென்று விட்டனர்,
ஆம், அது எங்கள் வீட்டருகில்
புங்கமரத்தில் வசித்த குயில் குடும்பம்,
வெற்று வீடாய் காட்சியளிக்கிறது
அந்த மரம்.
எப்படி சொல்வது என்று தெரியவில்லை
" WE MISS YOU LOT"
-பூமி.சாமி.
No comments:
Post a Comment