Monday, April 8, 2024

இருவருக்கிடையே
எல்லாம் ஒரு வழிபாதையாகி
போனபின்
புரிதல் எப்படி புலப்படும்.

பூமி.சாமி.




மரத்தை அண்டி வாழும்
பறவைகள் தான்
ஒட்டுண்ணி விதைகளை
மரத்தில் விதைக்கின்றன.


பூமி.சாமி.

உறிஞ்சி வாழும்
ஒட்டுண்ணிகளிடம்
உணர்வை எதிர்பார்ப்பது
மூடத்தனம்.

பூமி.சாமி.

Saturday, March 30, 2024


ஒவ்வொரு செயலை செய்யும்போதும் 
ஒரு கணக்கு மனதில் ஓடுகிறது 

ஒன்றை அன்பால் செய்கையில் கணக்கு
காணாமல் போகிறது

ஒன்றை கணக்குடன் செய்கையில்
அன்பு காணாமல் போகிறது.

பூமி.சாமி.



உனக்கு தேவை எனும்போது 
வலிய எடுத்துக்கொள்கிறாய்
எனக்கு தேவை எனும் போது
அது உன் உள்ளங்கையில்
இருந்தாலும் மூடிக் கொள்கிறாய்.

பூமி.சாமி.


Tuesday, March 19, 2024



நீ அக்கறையின் அதிசய தேவதை
உன் அன்பு சொற்கள் மனமருந்து 
உன் புன்னகை துன்பத்தை துடைத்தெறியம் மழை
உனக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது
இவ்வளவு நேரம் அக்கறை காட்ட
உன் நிம்மதியை இழந்து
அடுத்தவருக்கு நிம்மதியை கொடுக்கும் அட்சயப் பாத்திரம் 

நேத்ராவை பெற்றெடுத்த நேத்ரம்
எங்கள் சுமைகளை தாங்கி
கவலைகளை கரைத்துவிடும் கடல்
உன்னை அனைவருக்கும் பிடிக்க உன் சிரிப்பொன்றே போதும்.
வாழ்க வளமுடன் (ஹனி)தா.










Monday, March 18, 2024

என்னுடைய சுமையை
நீங்கள் சுமக்க வேண்டாம்
என்னுடைய சோகங்களில்
பங்கேற்க வேண்டாம்
என்னுடைய கஷ்ட நேரங்களில்
கூட இருக்க வேண்டாம்
நான் உடலாலும் மனதாலும்
அடிப்பட்டு வரும் நேரங்களில்
நான் உன்னோடு இருக்கிறேன்
என்று கண்ணால் உணர்த்துங்கள்
அதுபோதும் எனக்கு.