Saturday, November 11, 2023

அனைவருக்கும்
இனிய தீப ஒளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.💐💐💐💥🧨🪔🪔🪔

பேராசிரியர். இரா.ரெங்கசாமி.

நன்றி இல்லாதவர்களால்
நாம் ஏன் நன்மை செய்வதை
விடவேண்டும்
அவர்கள் அவர்களாக இருக்கட்டும்
நாம் நாமாக இருப்போம்.

நன்றி.

பூமி.சாமி.


Thursday, November 9, 2023

ஒரு பொருளின்
தேவை குறையும்போது 
முதலில்
ஒதுக்கி ஓரமாய்
வைக்கிறோம்
தேவை முடிந்தபின் 
தூக்கி தூர எறிகிறோம்

இப்படித்தான்
மனிதர்களையும்
கையாள்கிறமோ
என்று
யோசிக்க நினைக்கிறது.

பூமி.சாமி.





Wednesday, November 8, 2023

எளிதில்
கிடைக்கும்
எதற்கும்
மதிப்பு
குறைவுதான்,

உன்
அன்பு உட்பட.

பூமி.சாமி.

Tuesday, November 7, 2023

மலரோடு ஒரு 
மௌன உரையாடல்
மனதை மணமாக்குகிறது.


ஆனால் மனித உரையாடல்
மனதை ரண............

பூமி.சாமி.


Wednesday, November 1, 2023

குடையின்
கீழ் நிற்பது
கொடுமை
மழை பெய்கையில்.

Tuesday, October 31, 2023

படித்ததில் பிடித்த கவிதை

பேரன்பெல்லாம் 
வேண்டாம்
அவ்வளவு அன்பை என்னால் கையாள முடிவதில்லை 
அவ்வளவு அன்பை என்னால்  திருப்பிச்செலுத்திட இயலவில்லை

புழங்கியது போக 
மிச்ச அன்பெல்லாம்
பரண் மேல் கிடந்து
பாழாய்ப்போகும் சோகமெல்லாம் 
பாவம்
இந்த பேரன்பில்தான் 
நிகழ்கிறது 
 
பின்னும்
கொடுப்பதாயின் 
மனமுவந்து சிறிய அன்பினையேத் தாருங்கள்
எனக்கு 

கைக்கு அடக்கமாய் 
கையாள எளிதாய்
இன்னும் 
நான் திருப்பி செலுத்திட ஏதுவாய் 
இருக்கட்டும்
அவை

பேரன்பின் 
பெரும் மூச்சு முட்டல்களின்றி
ஒரு சிறிய புன்னகையில் 
ஒரு சிறிய நலன் விசாரிப்பில்
ஒரு சிறிய தலைகோதலில்
தொடரட்டும் 
அவை

-ரிஸ்கா முக்தார்-