Sunday, May 28, 2023

மறதியைப்போல் மாமருந்து இல்லை


வயது அதிகமாக
மனம் மென்மையாகும் 
காயங்கள் அதிகமாகும்
அதை மறக்க
மறதி அதிகமாகும்.

பூமி.சாமி


Monday, May 22, 2023

தூரத்திலேயே இருந்து கொள்கிறேன்
நீ கானல் நீர் ஆகுவது தெரிகிறாய்
அருகில் வந்தால் காணாத நீராகிறாய்.

-சாமி.

Monday, May 15, 2023

மூட்டை மூட்டையாய் முகமூடிகளை
தூக்கி அலைகிறோம்
முகத்தை மறைத்துக் கொள்ள.

-பூமி.சாமி.

Tuesday, May 9, 2023

வாழ்த்துக்கள்

உன் நம்பிக்கைக்கு காரணமாய்
எங்கள் வார்த்தைகள் இருந்திருக்க கூடும்

உன் முயற்சிக்கு பின் எங்கள் ஊக்கம் இருந்திருக்க கூடும்

உன் அறிவு முதிர்ச்சிக்கு எங்கள் அனுபவம் காரணமாய் இருந்திருக்க கூடும்

உன் வாழ்விற்கு வழியாய் ஒளியாய்
எங்களால் வந்த கல்வி இருக்கக்கூடும்

இவைவெல்லாம்
ஒன்றுமே இல்லை 
உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கு முன்

சென்று வாருங்கள் வென்று வாருங்கள்
வாழ்த்துக்கள்.


Wednesday, May 3, 2023

இருக்கும்போதே கொண்டாடுவோம்

என் இறுதி ஊர்வலத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்

 இப்பொழுது வாருங்கள் பேசிக்கொண்டு காலார நடப்போம் 

எனக்கு உங்கள் இறுதி மரியாதை வேண்டாம் 
இப்பொழுது என்னை மரியாதையுடன் நடத்துங்கள் போதும்

அப்போது என் மீது அழுது புரள வேண்டாம்
 இப்பொழுது என்னோடு சிறிது நேரம் சிரித்து பேசுங்கள் போதும்

 அப்போது என்னால் கேட்க முடியாத ஆயிரம் புகழ்  மொழிகள் வேண்டாம் 

ஒன்றிரண்டேனும் இப்பொழுது என் காதில் கூறுங்கள் போதும்

உங்கள் மலர் மாலைகள் வேண்டாம் 
இப்போது என்னை மலர்ந்த முகத்தோடு அணுகுங்கள் போதும்

அப்போது என்னை விட்டுப் பிரிந்து செல்கிறாயே என்று அழுது அலற்ற வேண்டாம் 
இப்போது 'நான் உன்னோடு இருக்கிறேன் 'என்ற கூறுங்கள் அது போதும்

அப்போது புகைப்படம் ஒட்டி வருந்துகிறேன் என்ற வார்த்தைகள் வேண்டாம்
இப்போது உயிர் படமாய் உன்னோடு இருக்கிறேன் என் உணர்வை மதி அது போதும் 

 நான் இருக்கும் நாட்களில் இதுவெல்லாம் செய்தால் 
என் இறுதி நாள் தள்ளிப்போகும் அது போதும் எனக்கு 

என் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டாம் நீங்கள்.



-பூமி.சாமி.

Friday, April 28, 2023

செய்த உதவிக்கு அங்கீகாரம் இல்லாமல்
போகும் போது 
உதவி செய்யும் உந்துதல் குறைந்து போகிறது.

Thursday, April 27, 2023

பணப்பிறழ்வு

மனப்பிறழ்வு என்று உலகம் சொல்லும் ஒரு மனிதருக்கு பத்து ரூபாய் பணம் கொடுத்தேன்
வாங்க மறுத்தார்
எனக்கு புரியவில்லை 
பிறகு ஒரு பழத்தை கொடுத்தேன் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் அன்றுதான் உணர்ந்தேன் மனப்பிறழ்வு அவருக்கு அல்ல எனக்குத்தான் என்று.

-பூமி.சாமி.