கிராமத்தான்
Sunday, March 26, 2023
பணம் இருக்கிறது
பரிகாரம் செய்ய
என்று பாவம் மேல் பாவம்
செய்பவர்களை
என்ன செய்ய
-பூமி.சாமி.
Friday, March 24, 2023
உண்மை!
சண்டாளி! உன் வசந்தத்தால்
எனக்கு இலையுதிர் காலம்.
-கவிக்கோ அப்துல் ரகுமான்.
Thursday, March 23, 2023
அடிமேல் அடி
வலிமேல் வலி
மனம் கலங்கத்தான் செய்கிறது
துயரங்களை சொல்ல வார்த்தை இல்லாமல் மௌனம் ஆவதும்
துயரங்களை பகிரும் செவிகளை இழப்பதும்
துயர நேரங்களில் சாயும் தோள்களை
தொலைப்பதும்
ஆறுதல் கூறும்
மனங்கள், மறுப்பதும்
துயரத்தின் மேல் துயரம்.
-பூமி.சாமி.
ஆயிரம் வார்த்தைகள்
தராத ஆறுதலை அளிப்பது
அதிகாலை அழுகை.
-பூமி.சாமி
Tuesday, March 21, 2023
மனிதர்கள் என்னை ஒதுக்கி
தள்ளினாலும்
என்னோடு கூட்டு சேர்வதற்கு இங்கு சில குருவிகளும் மரங்களும் இருக்கின்றன
அவைகள் என்னை ஒருபொழுதும் புறந்தள்ளுவது இல்லை.
-பூமி.சாமி
Sunday, March 19, 2023
சில சமயங்களில்,
என் சொல்லிலும் செயலிலும்
ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது
மன எண்ணத்தில் உள்ள அழுக்கு.
பூமி.சாமி.
Thursday, March 16, 2023
When we get more distance between our words and actions, it's automatically exposed ourselves.
-Boomi.Saami
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)