Saturday, June 12, 2021

The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி

மகிழ்ச்சிக்கான பாதை எது?

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்...

Saturday, June 5, 2021

ஒரு செயல் பல சொல்லை விட மேலானது

வீணாக மின்விளக்கு மின்விசிறி இயங்கினால் அணைத்து விடுகிறேன்,
நீர் வீணாகாமல் தவிர்த்து விடுகிறேன்,
வருடத்திற்கு ஒரு செடியேனும் வளர்த்து விடுகிறேன்,
குறைந்த தூரமெனில் நடந்தோ மிதிவண்டியிலயோ போகிறேன்,
தேவையில்லாமல் ஒலி எழுப்பமாட்டேன்,
கடைக்கு சென்றால் துணிப்பையொடு செல்கிறேன்,
எனவே எனக்கு ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் நாள் தான்.

-சாமி.


Friday, June 4, 2021

காலம்-காகம்-மனிதன்

பகிர்ந்துண்ணும் காகத்தையே
பக்கா தான்திண்ணியாக மாற்றியிருக்கிறது காலம்,
இந்த 'பகுத்தறிவு மனிதன்' எல்லாம்  எம்மாத்திரம்.

-சாமி.

Thursday, June 3, 2021

பொன் வண்டு.

கொன்றை மரத்தை பார்க்கும் பொழுதெல்லாம் பொன்வண்டைத் தேடித் தோற்கிறேன். இன்னும் சில வருடங்களில் கொன்றை மரத்தையும் 
தேட வேண்டும் போலிருக்கிறது.

-சாமி.

Saturday, May 29, 2021

நம்பிக்கைதான் வாழ்க்கை

இந்த சூழ்நிலையில் எல்லோரும் ஏதோ ஒரு மன நெருக்கடிக்கு மன பதட்டத்திற்கு
உள்ளாகி இருக்கிறோம் என்பது நன்றாக தெரிகிறது. எனவே முடிந்தவரை வீட்டில் உள்ளோரிடம் உரையாடுங்கள்,  வெளியில் உள்ள உங்கள் அன்புக்கு உரியவர்களிடம்  தொலைபேசியில் உரையாடுங்கள் உங்கள் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துங்கள். உதவி தேவைப்படுவோர்க்கு முடிந்தால் உதவுங்கள்.




Friday, May 28, 2021

தோல்வி-வெற்றி

வாழ்க்கையில் போராடி தோற்றுப்போவதும், ஒருவகையில் வெற்றிதான் ஏனென்றால் அதுதான்
வாழ்க்கையை புரிந்துக் கொள்ள உதவுகிறது.

-சாமி.

Monday, May 24, 2021

சிந்தித்து செயல்படு

நாம் பிறந்துவிட்டாலே மரணத்திற்கான
வரிசையில் நின்றுதான் ஆகவேண்டும்
ஆனால் நாம் நிற்க வேண்டிய வரிசை எண் நம்முடைய செயல்களால் தீர்மானிக்க படுகின்றன விதியால் அல்ல.

-சாமி.