Sunday, April 11, 2021

மாற்றங்கள்….!!மனங்களிலும்,குணங்களிலும்,வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்
சிலர் சென்று,
நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!

நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்…!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,

அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,

”எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?”

என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ”என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்’ என்றனர்.

”ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.

நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் ,

இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு
வந்து இதை சேர்த்து விடுங்கள்” என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,

எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!

புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!

இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்…!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது….. !

தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே…!என்றார்கள் .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*

“பார்த்தீர்களா….?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,

அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே ,

*நாம் நமது
தவறான செயல்களையும்,
தீய பழக்கங்களையும் ,
துர் குணங்களை
மாற்றிக் கொள்ளாமல்*,

எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,

எந்த கோயிலுக்கோ ,
சர்ச்சுக்கோ,
மசூதிக்கோ,
குளத்துக்கோ,
புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்….

எந்த பயனும் வந்து விடப் போவதில்லை….??

……*மாற்றங்கள்….!!
மனங்களிலும்,
குணங்களிலும்,
வந்தால் தான்
வாழ்க்கை இனிமையாகும்….!!
என்றார் அந்த ஞானி….!*

 என்றும் அன்புடன் தமிழன்.🙏

Friday, April 9, 2021

எனவே எதையும் நம்பிக்கையுடன் தொடங்கு.

பெரும்பாலும் நாம் ஒரு செயலை செய்தபின்னர்தான் நம்மாலும் இதுபோல் சிறப்பாக செய்ய இயலும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது, 
இப்படி  ஏற்படும் நம்பிக்கை வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உத்வேகம் கொடுக்கும். எனவே அனுபவம் மூலம் கிடைக்கும் நம்பிக்கை மிகப் பெரிது. 

-சாமி.

Saturday, April 3, 2021

எதிர்பார்ப்பு

உலகில் 
அதிகம் ஏமாற்றப்பட்ட சொல் 'எதிர்பார்ப்பு'.

-சாமி.

எதிர்பார்ப்பு- ஏமாற்றம்

ஒருவருக்கு ஏதோ ஒன்றை செய்து
இருந்தால்தான் அவர்களிடம் இருந்து
எதிர்பார்ப்பும் பிறகு ஏமாற்றமும் ஏற்படுகிறது இதனால் பிறருக்கு  செய்வதையே நிறுத்திவிட்டு என்கிறது மனது ஆனால் செய்துக் கொண்டே இரு அதுதான் உன் இயல்பு என்கிறது அறிவு.

-சாமி.

சாயம் ஒருநாள் .......

உள்ளம் சாக்கடை சகதியாய் இருக்க
வெளியில் நல்லவனாய் நன்றாக நடிப்பதையே நம்புகிறது இவ்உலகு.

-சாமி.

ஈகோ

சட்டை போல் கழட்ட நினைக்க
 தோலாய் ஒட்டிக்கொண்டு இருக்கிறது  'அகங்காரம்'.

-சாமி.

Friday, April 2, 2021

படித்ததில் பிடித்தது


Never trust your fears. Because they don't know your strength.