கிராமத்தான்
Monday, December 7, 2020
மறதி
தாய்மொழி எழுத்து மறந்து போகையில்
மறதியை மறக்க நினைக்கிறது மனசு.
-சாமி.
எது வாழ்க்கை
பிடித்ததை செய்வதா?
பிறருக்கு உதவுவதா?
அன்பு செய்வதா?
அறிவு புகட்டுவதா?
பயணப்படுதலா?
பற்றற்று வாழ்வதா?
தேடி திரிவதா?
தேங்கிப் போய் இருப்பதா?
அதன் போக்கில் விடுவதா?
கடிவாளமிட்டு கட்டுப்படுத்துவதா?
காதல் செய்வதா?
கவலையற்று வாழ்வதா?
தோல்வியில் கற்பதா?
வெற்றியில் உழல்வதா?
இயற்கையில் மகிழ்வதா?
இல்லை செயற்கையாய் செயல்படுவதா?
வேடிக்கை பார்ப்பதா?
வீருக்கொண்டு எழுவதா?
நினைத்து மகிழ்வதா?
தோண்டி துவழ்வதா?
வேண்டி திரிவதா?
விதியின் படி போவதா?
இக்கணம் வாழ்வதா?
இல்லை, இப்படியே புலம்புவதா?
எது வாழ்க்கை.
-சாமி.
சுற்றி சுழலும் மனசு
சுற்றும் பூமியை,
சுற்றாமல் சுற்றி சுற்றி வருகிறது மனசு.
-சாமி.
மழை எனும் மந்திரம்
மேலிருந்து கீழ் விழுந்து
என் மனதை கீழிருந்து மேல் நோக்கி
பறக்க செய்கிறது மழை.
-சாமி.
Saturday, December 5, 2020
கருப்புதான் எனக்கு பிடித்த....................
வெண் முகில்கள் அழகு அவ்வளவே,
கரு முகில்கள்தான் கவிழ்த்து விட்டு செல்கின்றன மழையை.
-சாமி.
Friday, December 4, 2020
மழை மனம் மகிழ்ச்சி
ஒவ்வொரு முறை மழையை
பார்க்கும் போதும்,
நான் சிறுவயதில் வேண்டுமென்றே
மழையில் நனைந்ததும் அதன் மகிழ்ச்சியும் குளிர்ச்சியும் மனதை நிறைக்கிறது.
-சாமி.
Monday, November 30, 2020
காக்க வைப்பது கொடுமை
அடுத்தவர்களுக்காக
காத்துக்கொண்டு இருப்பது
மிக துயரமான கடினமான விடயம்,
என்றாவது மிக முக்கியமானோரை நமக்கு மேல் உள்ளோரை காக்க வைத்து இருக்கிறோமா? நிச்சயமாக இல்லை,
இவர்கள் தானே என்று நினைத்து சிலரை காக்க வைக்கிறோம்,
காக்க வைப்பதை தவிருங்கள்.
-சாமி.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)