கொஞ்சம் பயமாகவே இருக்கிறது
உதறி விடுமோ
மறந்து விடுமோ
துன்பத்தில் இழுத்து விட்டு விடுமோ
துரோகம் இழைத்து விடுமோ
நன்றி மறந்து விடுமோ என்று
இதை தாண்டி
சில நற்கரங்கள்
உன்னை சுற்றி
எந்த ஆர்ப்பாட்டமும்
அழகும் இன்றி அறிதாய்
இருக்க கூடும்
கண்டடைவது
உன் கையில் தான் இருக்கிறது.
-பூமி.சாமி.