Monday, October 14, 2024

எந்த கரத்தையும் பற்றுவதற்கு
கொஞ்சம் பயமாகவே இருக்கிறது
உதறி விடுமோ 
மறந்து விடுமோ
துன்பத்தில் இழுத்து விட்டு விடுமோ
துரோகம் இழைத்து விடுமோ
நன்றி மறந்து விடுமோ என்று

இதை தாண்டி
சில நற்கரங்கள்
உன்னை சுற்றி
எந்த ஆர்ப்பாட்டமும்
அழகும் இன்றி அறிதாய்
இருக்க கூடும்
கண்டடைவது
உன் கையில் தான் இருக்கிறது.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment