Showing posts with label கரை அலை பூமி.சாமி. Show all posts
Showing posts with label கரை அலை பூமி.சாமி. Show all posts

Wednesday, January 29, 2025

கரைகள் அலைகளை
தொந்தரவாக நினைக்கக் கூடும் 
கரைகளின் அழுக்குகளை 
களைந்து அழகை கூட்டுவதும்
மனிதனின் மனதின் வேதனைகளை கழுவுவதும் என்னவோ 
அந்த அலைகள் தான் 

அது, அலைகளை இழந்த
கரைகளுக்கு தான் தெரியும் 

உங்கள் அருகில் கூட அலைகளை 
போல தொண தொணக்கும் மனிதர்கள் 
இருக்கக்கூடும் இழந்து விடாதீர்கள் 
அவர்களை‌‌.

பூமி.சாமி.