உன்னுடைய வழி அனுப்புதல் இல்லாமல்.
இப்பொழுதும் பிறந்தநாள் திருமண நாள் கொண்டாடுகிறேன்
உன்னுடைய ஆசியும் நீ கொடுக்கும் பத்து ரூபாய் பணமும் இல்லாமல்.
இப்பொழுதும் திருவிழாக்கள் போகிறது
நீ எங்களுக்கு இடும் திருநீறு இல்லாமல்.
இப்பொழுதும் தவறு செய்கிறேன்
தலையில் உன்னிடம் குட்டு வாங்காமல்
இப்பொழுதும் தலை சீவுகிறேன்
" என்னடா சாமி தலை வழுக்காயிட்டு"
என்ற வார்த்தைகள் இல்லாமல்.
இப்பொழுது வலி மாத்திரைகள்
கேட்பார் அற்று கிடக்கின்றன.
இப்பொழுதெல்லாம் வீட்டில் தேநீர் மிஞ்சி கிடக்கிறது.
வீட்டை சுற்றி சருகுகள் உன் பெருக்களுக்காக காத்து கிடக்கின்றன.
வீட்டை சுற்றி உள்ள பாதை நடப்பார் அற்று கிடக்கின்றன.
வீட்டின் கொல்லை கதவுகள் நீ வந்து மூடக் காத்துக்கிடக்கின்றன.
வீட்டில் கோழி நீ வந்து கவுப்பாய் என்று
வெளியில் உட்கார்ந்து இருக்கிறது.
வீட்டில் மாடு நீ வந்து அவில்பாய் என் கட்டியே இருக்கிறது.
வீட்டு நாய் உன் ஒரு உருண்டை சோறுக்காக காத்துக்கிடக்கிறது.
இங்கு எல்லோரும் காத்துக்கிடக்க
நீ காலத்தோடும் கடவுளோடும் உறைந்து
போனதேன் அம்மா.
-சாமி.
No comments:
Post a Comment