Monday, June 20, 2022

பிறரை இகழ நினைக்கிறேன்
ஒராயிரம் வார்த்தைகள் வரிசை
கட்டி நிற்கின்றன. அதைவிட
ஒன்றிரண்டு வார்த்தைகள்
கூடுதலாகவே உதிர்க்கிறேன்.

பிறரை புகழ நினைக்கிறேன்
ஒன்றிரண்டு வார்த்தைகளே வருகின்றன
அதையும் உதிர்க்க மனமில்லாமல்
ஒளித்து வைத்துக் கொள்கிறேன்.

-சாமி.

No comments:

Post a Comment