Tuesday, July 20, 2021

இளமை-இனிமை

பெட்டி கடைக்கு செல்கையில் வேல் தாத்தா தரும் இலவச பொட்டுக்கடலை வெல்லம்,

நண்பன் திருட்டு தனமாய் மரமேறி வெட்டிக் கொடுத்த நுங்கு,

காலை எழுந்தவுடன் ஓடி சென்று முதல் ஆளாய் பொருக்கி தின்னும் விளாம்பழம்,

பள்ளி சென்று திரும்புகையில் வயலில் தெரியாமல் பிடுங்கி தின்னும் கடலை,

பள்ளி செல்லும்போது நண்பர்களுடன் சேர்ந்து ரிக்சா மிதித்தது

வயிற்று வலி என்று பொய் சொல்லி பள்ளி செல்லாமல் இருந்தது,

பணம் கட்டவில்லை என்று பள்ளியில் இருந்து நண்பர்களுடன் திரும்பி நடந்து வந்தது,

உச்சி வெயிலில் வயலுக்கு ஓடிச் சென்று 
மாட்டு வண்டி ஓட்டி வந்ததது,

இரவில் நெற்க்கட்டுகளின் மேல் காவலுக்காக படுத்து உறங்கியது,

மாடுகள் பூட்டிய ஏர் கலப்பையை பிடித்து
உழவு செய்தது,

வரிசையாய் பூட்டிய மாடுகளை கொண்டு நெற்போர் அடித்தது,

பனந் தொன்னைகளில் வயல் வரப்பில் அமர்ந்து பசியாறியது,

நண்பர்களுடன் சேர்ந்து நாற்று அரிப்பது,  அண்டை வெட்டுவது, நாற்று விசுறுவது,

இப்படி எவ்வளவோ சுவையான இளமை நினைவுகள்,

இதில் ஏதாவது ஒன்றிரண்டு நினைவுகள் தினமும் என்னை அறியாமல் தூக்கி செல்கிறது மீண்டும் இளமைக்கு. 

-சாமி.

No comments:

Post a Comment