Sunday, July 11, 2021

வீழ்வேன் என்று நினைத்தாயோ

பேரிருளை பிளந்து வரும் மின்மினி நான்

கல்தரையை உடைத்து துளிர் விடும் ஒற்றை விதை நான்

இரைச்சலை  தாண்டி கானம் பாடும் கருங்குயில் நான்

அதிகாலையில் ஒற்றை ஆளாய் ஒளி வீசும் வெள்ளி விண்மீன் நான்

புயலை எதிர்த்து போராடும் நாணல் நான்

நீர் வீழ்கையில் மேலெழும் நீர் சாரல் நான்

காரிருளை பிளக்கும் மின்னல் நான்

லட்சம் உயிர் அணுக்களில் முந்தி முதல் ஆளாய் வந்தவன் நான்.

-சாமி.

No comments:

Post a Comment