அன்பில் ஈர்ப்பதில் பூமித்தாய் நீ,
அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் உள்ளது என உணர்த்தியவள் நீ,
அப்படி பார்க்கையில் பேரழகி நீ,
அக்கறை என்னும் அமிழ்தினில் மூழ்கடிகத்தவள் நீ,
சில நேரங்களில் அது கிடைக்காமல்
என்னை அதிகம் அழ வைத்தவளும் நீ,
நம் குடும்பம் உன்னை சூரியனாய் வைத்து சுற்றிவர உன் அக்கறை என்ற ஈர்ப்புவிசை தான் காரணம்,
அதில் பல நேரங்களில் மெர்குரியாய் இருக்க ஏங்கி இருக்கிறேன் நான்,
உன் அக்கறையை பெறும் பொழுது உச்சக்கட்ட பாசமும், அது கிடைக்காத பொழுது உச்ச கோபமும் வருகிறது எனக்கு,
எனக்கு ஒரு ஆசை உண்டு அது உன் அக்கறை மழையில் வாழ்நாள் எல்லாம் நனைய வேண்டும் என்பது,
ஒரு பேராசையும் உண்டு அது ...........
No comments:
Post a Comment