Saturday, November 29, 2025

உனக்காக காத்திருக்கிறேன்,

என்னை நீயாக அழைக்கப்போவதுமில்லை
என் கை கோர்க்க போவதுமில்லை 
என் தோள் சாய போவதுமில்லை 
சாப்பிட்டாயா என்று கூட கேட்க போவதுமில்லை 
ஆனாலும் காத்திருக்கிறேன் அன்பே
இவையெல்லாம் ஒருநாள் 
நடக்கும் என்று.

Sunday, November 23, 2025

LIFE

LIFE IS NOT A DESTINATION 
ITS NOT A JOURNEY 
ITS WHO YOU BECOME ON THE WAY.

Saturday, November 22, 2025

சில நேரங்களில் 
விசாரிப்புகள்,
நச்சரிப்பு 
தொந்தரவு 
என தோன்றும் 

அதுவும்
அன்புதான்
என்று உணரும்
ஒரு நாளில் 
விசாரிப்பும்
விசாரித்த வரும்
இல்லாமல் 
போயிருக்கும்.

-பூமி.சாமி.

Tuesday, November 18, 2025

நான் உன்னை மதிப்பதால் 
நீ என்னை மதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை 

நான் உன்னை மரியாதையுடன் நடத்துவதால் 
நீ என்னை அப்படி நடத்த தேவையில்லை

 நான் உன்னிடம் நன்றியுடன் இருப்பதால் நீ என்னிடம் நன்றியுடன் இருக்க வேண்டியதில்லை

 நான் உன்னிடம் அன்பாக இருப்பதால் நீயும் அன்பாக இருக்க தேவையில்லை

 நான் உன்னிடம் அக்கறையுடன் இருப்பதால் நீயும் அப்படி என்னிடம் இருக்கத் தேவையில்லை 

ஆனால் ஒரு உறவில் இவையெல்லாம் அவசியம் என்று மட்டும் எனக்கு தெரியும்

 நான் நானாக இருக்கிறேன்
 நீ நீயாக இரு 

காய்ந்த மரக்கட்டை துளிர்க்கும் என்று நினைத்தால் நான் ஒரு முட்டாள் ஆவேன்.


-பூமி.சாமி.

Thursday, November 13, 2025

உங்களுக்கு வரும்
தொலைபேசி அழைப்பு 
குறுஞ்செய்தி 
இவையெல்லாம் 
செய்தி சொல்லவோ
தகவல் தரவோ
மட்டுமல்ல 

அவை பெரும்பாலும் 
அன்பை வெளிப்படுத்தவோ
அக்கறையை காட்டவோ
நலம் விசாரிப்பாகவோ தான் 
இருக்கும் என்பதை 
மனதில் வையுங்கள் 
மனிதர்களே.


பூமி.சாமி.



Tuesday, November 11, 2025

நான் 'நாம்' என்கிறேன்
நீ 'நான்' என்கிறாய்.

-பூமி.சாமி.
நாம் அறிவை வளர்க்கும் 
புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், தவறில்லை 
அதே வேளையில் 
சிந்தனையில் உணர்வில் 
மாற்றம் ஏற்ப்படுத்தும்
புத்தகங்களை படிக்கும் போது
மனிதனால் இந்த சமூகத்தில் 
ஏற்படும் பிரச்சனைகள்
குறையும்.
மிகப் பெரிய மாற்றங்களை இது காலப்போக்கில் ஏற்படுத்தும்.
அதுவும் மனிதர்களை 
சக உயிர்களை, இயற்கையை
கையாளும் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு 
இந்த புத்தக வாசிப்பை 
கட்டாயம் ஆக்க வேண்டும் 
சக மனிதனின்
சக உயிரின் வலி புரியாதவர்கள் மற்றும் 
உயிர்நாடியான இந்த இயற்கையின் 
முக்கியத்துவம் தெரியாதவர்கள்
அறிவை மட்டுமே கொண்டு 
சிந்திப்பதால் பல பிரச்சனைகள் 
எழுகின்றன,
அவர்களை மனதை பண்படுத்தவும்
பக்குவபடுத்தவும் புத்தக வாசிப்பு நிச்சயம் பயண்படும்.
சில முடிவுகளை அறிவை பயன்படுத்தியும்
சில முடிவுகளை மனதை பயன்படுத்தியும்
முடிவு எடுக்க இந்த வாசிப்பு அவர்களுக்கு கைகொடுக்கும்.
கதவடைத்து இருளாய்
குறுகி கிடக்கும் மனித மனங்களை 
விசாலமான ஒளி பொருந்திய மனங்களை உருவாக்க 
புத்தக வாசிப்பு வழி வகுக்கும்.
எல்லா அலுவலத்திலும் புத்தகம் வாசிப்பதற்கும்
அதன்பின் உரையாடடுவதற்கும்
நேரம் இருக்கும் என்றால் 
சிந்தனை, செயல், சேவை மாற்றம் தானாகவே வரும்.


-பூமி.சாமி.