உனக்கு என்ன பிடிக்கும் என்றேன்
அப்படி ஒன்றும் இல்லை என்றாய்
எதை செய்ய விருப்பம் என்றேன்
அப்படியும் ஒன்றும் இல்லை என்றாய்
யாரை உனக்கு பிடிக்கும் என்றேன்
என்னை தவிர சிலரை சொன்னாய்
உனக்கு உன்னை பிடிக்குமா என்றேன்
அமைதியாய் இருந்தாய்
என்னை பிடிக்குமா என்றேன்
பேரமேதிக்கு சென்றாய்
எது எப்படியோ
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன்,
புன்னகை புரிந்தாய்.
-பூமி.சாமி.