ஒரு இறப்பு செய்தி
அவரை தெரிந்த வாட்ஸ்அப் குழுவில்
போட்டேன்
ஒருவர் RIP போட்டார்
இன்னொருவர் ஸ்மைலியோடு நின்றார்
மற்றொருவர் விபரம் கேட்டார்
இன்னொருவர் வருத்தப்படுவதாய் சொன்னார்
சிலர் மட்டும் மாலையோடு
மலர் அஞ்சலி செய்ய
பல பேர் இதற்கும்
நமக்கும் சம்பந்தம் இல்லை
என இருந்து விட
நம் இறப்புக்கு பின்னும் என்ன
நடக்கும் என்பதை அறியும்
மந்திரசக்தி வந்து விட்டது
எனக்கு.
பூமி.சாமி.