உன் நினைவுகளுடன் தான்
நித்தம் நித்தம் நகருகிறது நாழிகை
உன் கனவுகளுடன் தான்
இரவில் கலைகிறது உறக்கம்
கற்பனையில் உன்னுடன்தான்
தித்திக்கிறது வாழ்க்கை
நிஜமாய் எதுவும் நடக்காது என்றபோதும்
உன் நினைவு என்பதும்
நிஜமாய் நீ என்பதும் ஒன்றுதான் எனக்கு.
பூமி.சாமி.