நற்செயலால் வரும் வலியும் தீச்செயலால் வரும் சுகமும் சில நொடிகளே
Monday, May 20, 2024
Thursday, May 16, 2024
Sunday, May 12, 2024
வயல் வரப்பில் அமர்ந்து
பனை ஓலை தொன்னையில்தின்ன பழைய சோறு
அதற்கு தொட்டுக்காய்
சிறு தொன்னையில்
முருங்கை கீரை இட்டு சுண்டிய
பழைய குழம்பு
உளுந்து துவையல்
வறுத்த சுண்டை மிளகாய் வற்றல்
சொர்க்கத்தில் அமர்ந்து அமுதுண்ண
அற்புத தருணங்கள் இவை
பனை மரங்கள் அற்ற வீட்டு மனைகளாய் வயல்கள்
பழைய சோறுக்கு பதிலாய்
பலநாள் முன் அறைத்த இட்லி மாவு
வெட்ட வெளியிலிருந்து
வீட்டுக்குள் சுருங்கி போன நாம்
சொர்க்கத்தில் நரகத்திற்கு
கொஞ்சம் இடைவெளி தான்
அது பத்து இருபது ஆண்டுகள் தான்.
பூமி.சாமி.
-பூமி.சாமி.
உலகின் மிக சிறந்த போராளியை
உன்னால் காட்ட முடியுமா
உன்னால் தியாகத்தை உருவகப் படுத்தமுடியுமா
கலப்படமில்லாத அன்பை கண்டதுண்டா
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லா
அன்பு என்று ஒன்று உண்டா
கருணை காட்டிய அதே கண்ணால்
கண்டிப்பை காட்ட இயலுமா
வாழ்க்கை திறன்களை நமக்கு கற்று தந்த பல்கலைக்கழகத்தை உனக்கு தெரியுமா
கடவுளை நேரில் தரிசித்தது உண்டா
கடவுள் உன் அருகில் தான்
இருக்கிறார்
உன்னோடு தான் நேரிலோ நினைவாகவே இருக்கிறார்
உணர்ந்தது உண்டா
அவள்தான் உலகத்தை உள்ளடக்கிய உலகம்.
தினம் தினம் அவளின் தினம்தான்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)