கல்லூரி முடித்து
ஒரிரு வருடம் கழித்து
மாணவர்கள் தொலைபேசியில்
அழைப்பதுண்டு
ஒருவர் கேட்பார்
மதிப்பெண்
பட்டியல் வந்துவிட்டதா என்று
மற்றொருவர் கேட்பார்
பட்டமளிப்பு விழா எப்போதென்று
இன்னொருவர் கேட்பார்
ஏதாவது வேலை வாய்ப்பு
இருந்தால் சொல்லுங்கள் என்று
இதுவரை ஒருவரும் கேட்டதில்லை
" தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று
-பூமி.சாமி.