சிலபேர் " உனக்கு சூடு சுரணை இல்லையா"
என்று என் காது படவே பேசுகிறார்கள்
எத்தனை முறை காயப்பட்டாலும்
அவமானப்படுத்தப் பட்டாலும்
அதையெல்லாம் மறந்து
நான் உன் முன் நிற்கிறேன்
சூடு சுரணை உள்ள மானஸ்தர்களை
பார்த்து நான் கேட்கிறேன்
" உண்மையான அன்பின் வலிமையை என்றாவது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா" என்று.
பூமி.சாமி.