Wednesday, September 22, 2021

மயிலிறகும் அதன் குட்டிகளும்

பள்ளி பருவத்தில்
நோட்டு புத்தகத்தில்
வைத்த மயிலிறகும் அதன் குட்டிகளும்
உயிர்ப்புடன் வாழ்ந்து வருகின்றன 
என் மனதில் இதுநாள்வரை.

-சாமி.

Tuesday, September 21, 2021

காத்திருக்கிறேன் கதிரவனே

ஒன்று உன் செங்கதிரை நான் பற்றி
ஏறி வரவேண்டும்,
இல்லையேல்,
என் கரம் பற்றி நீ இறங்கி வர வேண்டும்,
காத்திருக்கிறேன் கதிரவனே
உன்னுடன் ஒரு செல்ஃபி எடுக்க.

-சாமி.
இங்கு எல்லோரும்
தற்கொலைதான் செய்து கொள்கிறார்கள்,
தவணை முறையில்.

கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா.

Monday, September 20, 2021

கொரானா காலம்

இப்பொழுது
தாடிகள் தப்பிக்கிறது
முக கவசத்தின் கருணையால்.

-சாமி.

Saturday, September 18, 2021

நன்றி

நன்றி செய்தவருக்கு வாலாட்டுகிறது ஐந்தறிவு,
நன்றி செய்தவரிடமே வாலாட்டுகிறது ஆறறிவு.

-சாமி.

Friday, September 17, 2021

அக்கறை-ஏமாற்றம்

அக்கரையில் அக்கறை
இக்கரைக்கு ஏமாற்றம்.

-சாமி.
யார் சொல்லியிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும் 
நானே சொன்னாலும்
உன் புத்திக்கும்
பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.

தந்தை பெரியார்.