Saturday, July 17, 2021

காலம்

கடந்தகால கசப்புகளையும் வலிகளையும் மறக்க வைக்கும் காலம் எனும் மாமருந்து, சில நேரங்களில்
நல்லவைகளையும் நல்லவர்களையும் கூட மறக்க செய்துவிடுகிறது.

-சாமி.

Tuesday, July 13, 2021

ஏனெனில் நமது பயணம் குறைவு.

* நம் பயணம் குறுகியது *

* ஒரு வயதான பெண் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில், ஒரு வலிமையான இளம் பெண் மேலே ஏறி, வயதான பெண்ணின் அருகில் அமர்ந்து, அவள் லக்கேஜை வைத்து நெருக்கடி கொடுத்தாள். *

* வயதான பெண் அமைதியாக இருப்பதைக் கண்டதும்,  பெண் தன் பைகளால் அடித்தபோது ஏன் புகார் கொடுக்கவில்லை என்று நடத்துநர் கேட்டார். *

* வயதான பெண் ஒரு புன்னகையுடன் பதிலளித்தார்: "நமது பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதால், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ ​​அல்லது அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்கவோ தேவையில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறேன் என்று சொன்னார் ." *

* இந்த பதில் தங்க எழுத்துக்களால் எழுதப்பட வேண்டியது: "இவ்வளவு அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நாம்  ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியகாலம்மட்டுமே." *

* இந்த உலகில் நம்முடைய வாழும் நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயனற்ற வாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவற்றால் அதை இருட்டடிப்பது நேரத்தையும் சக்தியையும் கேலிக்குரியதாக்கும். *

* யாராவது உங்கள் இதயத்தை உடைத்திருக்கிறார்களா? அமைதியாய் இருங்கள். நம் பயணம் மிகக் குறைவு. *

* யாராவது உங்களை காட்டிக் கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா? ஓய்வெடுங்கள். மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். நம் பயணம் மிகக் குறைவு. *

* யாராவது உங்களை காரணமின்றி அவமதித்தார்களா?  அதை புறக்கணிக்கவும்.நம் பயணம் மிகக் குறைவு. *

* உங்களுக்குப் பிடிக்காத  பக்கத்து வீட்டுக்காரர் உங்களைப் பற்றிய கருத்து தெரிவித்தாரா? ஆழ்ந்த மூச்சு விடுங்கள். அவரை / அவளை புறக்கணிக்கவும். மன்னித்து மறந்து விடுங்கள். நம் பயணம் மிகக் குறைவு. *

* யாராவது உங்களை எந்த பிரச்சனையில் கொண்டு வந்தாலும், நம் பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். *

* நமது பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. எந்த நிறுத்தத்தில் அது முடியும் என்பது யாருக்கும் தெரியாது.  பயணம் குறுகியது. *

* நண்பர்களையும் குடும்பத்தினரையும் பாராட்டுவோம். *
* நாம் மரியாதைக்குரியவர்களாகவும், கனிவானவர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்போம். *
*  நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்திருப்போம்

* உங்கள் புன்னகையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நமது பயணம் மிகவும் குறுகியது ... *

_ ஆசிரியர் தெரியவில்லை ஒரு சிந்தனையைத் தூண்டும் செய்தி

படித்ததில் பிடித்தது.

Monday, July 12, 2021

முதலில்நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

 கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்
 அதுல பதிலை எழுதுங்க.

 ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது.

ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.

 உங்களால முடியலேன்னா
 அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க.

அதுவும் முடியலியா….

 படிச்சிகிட்டே போங்க….

ரெடியா.....

1.
உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..

2.
2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

3.
சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள்
ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….

4.
நோபல் பரிசு வாங்கிய
 உங்களுக்கு தெரிந்த
ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..

5.
கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய
ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?

 இல்லே தானே?

நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ
 அல்லது
தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.

 இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.

அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.

 மிகப் பெரிய சாதனையாளர்கள்.

ஆனால்……?

 கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.

சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன.

விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.

இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்

பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்

1)
உங்கள் பள்ளிக் காலத்தில்
மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.

2)
உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…

3)
உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…

4)
உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….

5)
நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ
அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…

சில மணித்துளிகளில்
விடைகளை
பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......

இதிலிருந்து என்ன தெரிகிறது?

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
 பணக்காரர்களோ,
 புகழ்பெற்றவர்களோ
அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.

உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.

மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.

பணம் பட்டம் பதவி
இவற்றின் மூலம் பெறும் புகழோ
 வெற்றியோ நிலையானதல்ல.

 பிறருக்கு உதவி செய்து,
பிறர் மீது அக்கறை கொண்டு
ஒருவர் பெறும் புகழே
வெற்றியே நிலையானது.

உங்கள் மாணவர்கள்
 நண்பர்கள்
 மற்றும்
 உறவினர்கள்

 சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு
 அவர்கள் ஒருவராவது
 விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.

எனவே

அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால்

எப்போதும் நல்லதே நினையுங்கள்.
எல்லோருக்கும்
 நல்லதையே சொல்லுங்கள்.
 நல்லதையே செய்யுங்கள்.

கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு
கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும்.

முதலில்
நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.
❤️❤️❤️

கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்க...!
   ✿ ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்க...!
   ✿ சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்க...!

Sunday, July 11, 2021

வீழ்வேன் என்று நினைத்தாயோ

பேரிருளை பிளந்து வரும் மின்மினி நான்

கல்தரையை உடைத்து துளிர் விடும் ஒற்றை விதை நான்

இரைச்சலை  தாண்டி கானம் பாடும் கருங்குயில் நான்

அதிகாலையில் ஒற்றை ஆளாய் ஒளி வீசும் வெள்ளி விண்மீன் நான்

புயலை எதிர்த்து போராடும் நாணல் நான்

நீர் வீழ்கையில் மேலெழும் நீர் சாரல் நான்

காரிருளை பிளக்கும் மின்னல் நான்

லட்சம் உயிர் அணுக்களில் முந்தி முதல் ஆளாய் வந்தவன் நான்.

-சாமி.

Thursday, July 8, 2021

உங்களுக்கான நேரம் முக்கியம்

பெண்களே
PHD பண்றீங்களோ இல்லையோ பட்டப்படிப்பு படிக்கிறீங்களோ இல்லையோ இத படிங்க முதல்ல

வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்...

எங்கள் தோழி...

50 வயதைக்  கடந்தவள்..

அவள் பிறந்த நாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின்  மரண செய்தி... 

பேரதிர்ச்சி எங்களுக்கு..

அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை  அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்...

எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை,  எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்...
ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று..

அதில் தொனித்த வேதனையை  எங்களால் இனம் காண முடிந்தது..

அவள் இறந்து 1 மாதமாயிற்று...

பாவம் அவள் கணவர்...

இப்போது எப்படி சமாளிக்கிறாரோ?? பயணம் செய்யும் பணியில் இருந்து கொண்டு பிள்ளைகளை, தன் வயதான தாய் தந்தையரை எப்படி கவனிக்கிறாரோ என வருத்தம் தோன்ற, எதாவது உதவி செய்ய முடிந்தால் செய்யலாம் என அவரை அலைபேசியில் அழைத்தேன்.. 

பதிலில்லை. அரை மணி கழித்து அவரே அழைத்து, தான் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்படியே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் , அதனால்தான் உடன் அழைப்பை ஏற்க வில்லை என மன்னிப்பு கோரினார்.. 

எப்படி இருக்கிறீர்கள் என்றேன்..

பயணம் செய்யும் பொறுப்பிலிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு ஊரிலிருந்தே வேலை செய்யும் பொறுப்பிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம்..

வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்.

சமையல் செய்வதற்காக ஒருவரை நியமித்து அவரே கடையிலிருந்து பொருட்களை வாங்கி வருமாறும் பணித்திருக்கிறாராம்..தன் தாய் தந்தையரை பார்த்துக் கொள்ள செவிலியர்களை நியமித்திருக்கிறாராம்..

பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்..

"பிள்ளைகள் நலம்..நான் பார்த்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் சுமூக நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறோம்.." என்றார்..

சிறிது நேரம் பேசிவிட்டு, முடித்தேன் ...

என் கண்கள் குளமாகியது. என் தோழி நினைவிற்கு வந்தாள். பள்ளி தோழிகள் சந்திப்பிற்கு அவள் வரவில்லை, காரணம் அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை. அவளின் அண்ணன் மகள் திருமணத்திற்கு அவளால் போக முடியவில்லை , காரணம் அவள் வீட்டில் ரிப்பேர் நடந்து கொண்டிருந்தது, எங்கள் தோழியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை, காரணம் அவள் பிள்ளைகளுக்கு தேர்வு..நாங்கள் அனைவரும் இணைந்து சென்ற  திரைப்படத்திற்கு அவள் வரவில்லை, காரணம் இரவு உணவு சமைக்க வேண்டும்..

இப்படி எத்தனை இனிமையான தருணங்களை அவள் இழந்திருக்கிறாள்..
அவளுக்காக அவள் வாழவே இல்லை..
மற்றவர்களுக்காக மட்டுமே  வாழ்ந்திருக்கிறாள்..இறுதி வரை அவள் எதிர்நோக்கிய பாராட்டும் அங்கீகாரமும் இத்தனை செய்தும் கூட அவளுக்கு கிடைக்கவே இல்லை..

இப்போது அவளிடம் சொல்ல துடிக்கிறேன், 
இந்த உலகத்தில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல, யாரை இழந்தாலும் அவரைச் சார்ந்திருப்போர் சிறிது நாட்களில் அவரின்றி வாழ பழகி விடுவார்கள்.. தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் அவளது முதல் கடமை என மற்றவர்கள் நினைப்பதும், அவளும் அவர்களுக்கு முதல் உரிமை கொடுத்து விட்டு  இரண்டாவதாக தன்னைப் பார்த்துக் கொள்வதும்,  நான் இல்லை என்றால் என் வீடு தடுமாறி விடும் என்றெல்லாம் நினைப்பது நம் மனதின் அறியாமை...அப்படி நினைத்து ஒரு நாள் கூட அவள் அவளுக்காக வாழவில்லை..
ஆனால் இதையெல்லாம்  சொல்வதற்கு அவள் இப்போது உயிருடன் இல்லை...

தோழிகளே...

எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், எத்தனை பணிகள் இருந்தாலும்
உங்களுக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.. 

அது உங்கள் நேரம்..

உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்...ஆடுங்கள், பாடுங்கள், என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள் 

பள்ளி கல்லூரி தோழிகளிடம் பேசுங்கள்,பகிருங்கள், சிரியுங்கள்..வாழ்க்கையை அனுபவியுங்கள்..

இது உங்கள் வாழ்க்கை.. உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள்.. 

உங்களுக்கான இன்பத்தை  மற்றவர்களுக்காக தொலைத்து விடாதீர்கள்..

நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே, மற்றவர்களை மகிழ்விக்க முடியும்..

இறுதியாக ஒரே ஒரு வார்த்தை..

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்...

அனுபவித்து வாழுங்கள்.

வாழ்க்கை அழகானது..

(தோழிகள் வாட்சப் குழுமத்தில் வந்த தகவல் மனதை மிகவும் தொட்டதால்) உங்களுடன் ....

Tuesday, July 6, 2021

தோற்றம் வைத்து எடை போடாதே.

ஒடித்தால் மடக் என ஒடியும்
முருங்கையில் தான் இரும்பு (ஒடிக்கமுடியாத) சத்து
இருக்கிறது.


-சாமி.

Sunday, July 4, 2021

Sky Watch

இரவில் மொட்டை மாடியில்
மல்லாந்து படுத்துக் நட்சத்திரங்களுக்கிடையே கண்கள் அலைகையில் 
என்னையும் சில வேற்றுகிரக கண்கள் 
பார்ப்பதாய் உணர்கிறேன்.

-சாமி.