Wednesday, March 17, 2021

உதவி

நாம் செய்தால் மலையாய் நிலைக்கிறது,
நாம் பெற்றால் மழையாய் மறைகிறது,  மனதில்.

-சாமி.

மணமில்லா மனம்

 பணம் பற்றியே  எண்ணும்
மனிதனின் மனதிடம் மணம் குணம் எதிர்பார்ப்பது மடத்தனமானது.

சாமி.

Saturday, March 13, 2021

மேகமா? குடையா?

சில நட்புகள், உறவுகள் மேக நிழலாய்
வந்து போவதுண்டு, 
குறைவான நேரம் நமக்கு நிழல் தரும் பின் வேறிடம் சென்று வேறு ஒருவருக்கு நிழல் தரும்,
சில நட்புகள் உறவுகள் குடை நிழலாய் கடைசி வரை பின் வருவதும் உண்டு,
நாம் குடையை பற்றியிருப்போம் அது நம்மை பற்றியிருக்கும்,
எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

-சாமி.

Thursday, March 11, 2021

காலக்கொடுமை

நடிப்பால் திரைப்படம் மட்டுமல்ல,
வாழ்க்கையும் நன்றாக ஓடுகிறது சிலருக்கு.

Wednesday, March 10, 2021

வாழ்க்கை வாழ்வதற்கே...!

வாழ்க்கை வாழ்வதற்கே...!!!

கை குலுக்கும் பொழுது உறுதியாக கை குலுக்குங்கள்...

கண்ணைப் பார்த்து பேசுங்கள். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும்...

யாருடனாவது மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டால் எப்பொழுதும் முதலில் இறங்கி போய்  பேசி சரி செய்வது நீங்களாக இருங்கள்...

எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள் பயம் உங்கள் தொண்டையை அடைக்கும் பொழுதும் கூட துணிச்சலுடன் இருங்கள் அல்லது இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்கள்...

வாழ்க்கை துணை அல்லது காதலியை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். ஏனெனில் உங்களது வாழ்க்கையில் 90% நிகழ்வுகள் இவரை சார்ந்தே அமைகிறது...

உங்களுக்கு தெரியாத நபருக்கும் உதவி செய்ய தயாராக இருங்கள்...

உங்கள் புத்தக தொகுப்பிலிருந்து எதையும் கடனாக கொடுக்காதீர்கள்...

குழந்தைகளோடு விளையாடும் பொழுது அவர்களை வெற்றி பெற விடுங்கள்...

இந்த உலகத்தில் துக்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு தான் வந்தோம் போகும் பொழுதும் வெறும் கையோடு தான் போக போகிறோம் எனவே எப்பொழுதும் மன மகிழ்வுடனேயே இருங்கள்...

எல்லா பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்கப்படுகின்றன அது போலவே எல்லா மோசமான சூழ்நிலைகளும் அதற்கான தீர்வுகளோடு தான் வருகின்றன...

இதற்கு மேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றிருக்கும் நபரோடு மோதாதீர்கள்...

நீங்கள் விரும்பும் நபரை எந்தளவுக்கு விரும்புகிறீர்கள் என கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தெரிவிக்க மறவாதீர்கள்...

நண்பர்களோ உறவினர்களோ உடல் நலமில்லாமல் இருந்தால் நேரில் சென்று நலம் விசாரிக்க தவறாதீர்கள்...

அவ்வப்பொழுது புதிய இடங்களுக்கு பயணம் செய்யுங்கள்...

தூங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு சிறிய நோட்டையும் பேனாவையும் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி போடக்கூடிய யோசனைகள் பெரும்பாலும்  படுக்கையில் இருக்கும் பொழுது தான் வரும்...

வங்கி வாசலில் நிற்கும் காவலாளியாக இருக்கட்டும் டீ போட்டு கொடுக்கும் மாஸ்டராக இருக்கட்டும் ஒரு வணக்கத்தை தெரிவிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்...

குழந்தைகள் போகும் பள்ளிபேருந்தை பார்த்தால் டாடா சொல்லுங்கள் சிறு குழந்தைகளை பார்த்தால் புன்னகைக்க மறக்காதீர்கள்...

வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம் தான்....!!!

படித்ததில் பிடித்தது

Marketing

இதுவல்லவோ சாமர்த்தியம்...!
.
இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான்.
.
இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார்.
.
குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.
.
முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது".
.
இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான்.
.
முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார்.
.
"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"
.
இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்".
.
அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்"
.
வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."
.
"ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி.
.
"உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்க படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஒரு இருபது அடி நீள படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்கு தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"
.
"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.
.
"இல்லை, அவர், தனக்கு தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன்."
.
முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"
.
"அங்கு எல் ஐ சி யில் ஏஜென்ட் ஆக இருந்தேன், ஏன் ?"
.
"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்த கடையை பார்த்துக்கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்"

Saturday, March 6, 2021

வாழ்வின் எதார்த்தம்

பிறர் உடுக்கை இழந்தபோதெல்லாம்
இடுக்கண் களைந்தாய்,
ஆனால் நீ மட்டும் இப்போது
நிர்வாணமாய்.


-சாமி.