Friday, November 27, 2020

மணி பர்ஸ் புயல்கள்

சில நேரங்களில் புயல்கள்
நம் 'மணி பர்ஸ்களில்' மையம்
கொண்டு விடுகிறது.
அவை கரை ஏறுகையில்
நாம் கட(னி)லில் அழுந்தப்படுகிறோம்.

-சாமி.

Thursday, November 26, 2020

நிவர் புயல்

ஒரு கண்,
இரு கண்ணில்
பயத்தை காட்டியநாள் இன்று.

-சாமி

Monday, November 23, 2020

தொட்டா சினுங்கி

தொட்டால் சினுங்கியதை 
சொல்லும் உலகம்,
உடனே மீண்டெலுந்ததை
சொல்வது இல்லை.

-சாமி.

Sunday, November 22, 2020

நெற்க்கதிர்.

தான் தலை குனிந்து
விவசாயியை தலைநிமிர
செய்தது தங்க நெற்க்கதிர்.

-சாமி.

Saturday, November 21, 2020

எதிர்பார்ப்பு.....

எதிர்பார்ப்புக்கும்  ஏமாற்றத்துக்கும்
 இடையே 
மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் 
வைப்பதே மனதின் மாயை.

-சாமி.

Friday, November 20, 2020

சாக்ரடீஸ்

#சிந்திக்கும்நாக்கு

படிப்பின் பயன் என்பது வேலை தேடுவது, சம்பாதிப்பது மட்டுமில்லை; சுயசிந்தனையுடன் தேடலுடன் உலகை புரிந்துகொள்வதாகும். சாக்ரடீஸ் எழுப்பிய கேள்விகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மிடையே எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அது சிந்தனை யின் வலிமையைக் காட்டுகிறது. எது குறித்தும் கேள்வி கேட்டு, அதன் அடிப்படைகளைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீஸின் பாணி.

ஏதென்ஸ் மக்கள் சாக்ரடீஸிடம் பேசினால் தங்களுக்குத் தெளிவு கிடைக்கும் என்று நம்பினார்கள். சாக்ரடீஸ் பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகளைச் சொல்வது இல்லை. மாறாக, பிரச்சினைகளின் காரணத்தை கேள்வியின் மூலம் உணரச்செய்கிறார். அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பகுத்தறிவுகொண்டு சிந்திக்க வைக்கிறார்.

இதனால் பொது மக்கள் பிரச்சினைகள் எதனால் உருவா கிறது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். அதைப் போக்குவதற்குக் குரலும் கொடுத்தார்கள். சாக்ரடீஸ் தனது காலத்திய சமூக பழக்க வழக்கங்களை ஆராய்ந்து கேள்விகள் எழுப்பியதுடன் அரசாங்கத்தை, அதிகாரத்தைக் கடுமையாக விமர்சனமும் செய்தார். அந்தத் துணிச்சல், நேர்மை, மன உறுதியே இன்றளவும் சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டுகிறது.

விஷம் குடித்து சாக வேண்டும் என சாக்ரடீஸ் தண்டிக்கப்பட்டார். அப்போதும் அவர் விஷத்தைக் கண்டு பயப்படவில்லை. கையில் வாங்கி விரும்பிக் குடித்தார். தான் தீர்க்க வேண்டிய கடன் பாக்கியை நினைவுபடுத்திவிட்டே அவர் மரணத்தை சந்தித்தார். சாக்ரடீஸின் மரணத்தைப் பற்றி குறிப்பிடும்போது ‘சாக்ரடீஸ் சிந்திப்பதை நிறுத்தி விட்டார்’ என்றே சீடர்கள் அறிவித்தார்கள். சிந்திப்பதே மனிதனின் சிறப்பியல்பு. ‘மனிதன் என்பவன் மதிப்பீடு களை உருவாக்கிக்கொண்டு வாழும் ஒரு விலங்கு.'

#எஸ்_ராமகிருஷ்ணன்

படித்ததில் பிடித்தது

#டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது.
கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன் பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார். அந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள்.
அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள். ஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
இறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்?’ என்று.
அந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்... 'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்!’ என்று சொன்னாள். அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.
நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்!'' ..