Monday, June 15, 2020

வாழ்க்கை

வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டேன்? 
பல நூறு விடைகளை விழுங்கியப்பின்னும், 
அந்த வினா மட்டும் அப்படியே இருந்தது.

சாமியின் சிந்தனை.

கொடுத்துப்பார்/பெற்றுப்பார் தெரியும்.

என்னை பொருத்தவரை 'அன்பு' என்பது பெயர்ச்சொல் அல்ல வினைச்சொல்.

சாமியின் சிந்தனை.

Saturday, June 13, 2020

படித்ததில் பயனுள்ளது: மனித உளவியல்

*மனிதம் பற்றிய உளவியல் தகவல்*

1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.

2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்.

4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.

5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.

6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.

7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.

8. மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.

9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.

11. ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று
 உளவியல் கூறுகிறது.

12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம். 

13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.

14. ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும்.

15.  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

16. ஒருவர் அடிக்கடி *Mobile phone* யை பார்த்துக் கொண்டிருப்பது or *Mobile சத்தம் *(Notification tones)* கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம்.

17. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.

18. ஒருவர் அதிகமாக  *Negative Thoughts* ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் *Negative Thoughts* கதைப்பவராக இருப்பார்.👆👆👆☹️☹️☹️

Tuesday, June 9, 2020

Humanity

TN Seshan told the story in a management seminar. While he was the Chief Elect Commissioner,  he and his wife were traveling in a car in UP. They saw a sprawling mango garden wherein they saw large, beautiful numbers nests  of sparrows. His wife was so much interested to get two numbers of the nests for their house.  The police man who was accompanying them approached a boy who was was rearing cows,  for the same. He was offered 10 rupees initially. He refused to accept. Then,  TN Seshan said he will pay 50 rupees for which also he refused and said he will not do the same for whatsoever amount. His reason was, he said, there could be the little ones, chicks,  inside the nest. In the evening, when the  mother sparrow come back with food for the chicks, she will find her chicks are  missing and it will start crying. The boy said I can't bear the same. TN Seshan and his wife were stunned at this sentence.  He says all my positions, IAS etc melted in front of the boy as nothing. I became a small  grain of mustard in front of the boy. I left the desire to get the nest. 
Education, coat and suit  are never the  measures of humanity.

Monday, June 8, 2020

நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள. படித்ததில் பிடித்தது.

நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள

எதிர்மறை எண்ணங்கள் தோன்ற காரணமாக இருப்பது என்ன என்பதை கண்டறிந்து அதனை நீக்கி விட்டாலே போதும் Positive thoughts மனதில் உதயமாகிவிடும்.

எதிர்மறை எண்ணங்கள் உருவாக முக்கிய காரணம், தன்னம்பிக்கை இல்லாமை.

தன்னம்பிக்கை உருவாக உங்களை நீங்கள் பெருமையாகவும் கர்வமாகவும் எண்ணும்படி நடந்துகொள்ள வேண்டும்.எல்லா செயல்களையும் எல்லோராலும் செய்யமுடியும்.ஆனால் அப்படி முடிகிறதா? ஒரு சிலரே அதற்கு சாத்தியப்பட்டவர்களாக உள்ளனர், அந்த சிலர் தன்னமிக்கை கொண்ட பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

1. முதலில் எதையும் உங்களால் செய்ய முடியும் என்பதை வலுவாக நம்புங்கள். நம்பிக்கையூட்டும் வாசகங்களை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

2. எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்,எதையும் எதிர்கொள்ளலாம் என்ற பக்குவத்திற்கு மனதை ஆயத்தப்படுத்துங்கள்.

3. ஒரு விஷயத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் போது,உங்களது எண்ணங்களும் செயல்களும் உங்களது கட்டுபாட்டில் வருகிறது.

4. உன்னால் முடியாது,உனக்கு தகுதியில்லை போன்ற எதிர்மறையான பேச்சுக்களை பேசுபவரிடம் இருந்து தள்ளியிருங்கள்.

5. தினமும் உங்களை நினைத்து பெருமை கொள்ளும் ஏதோ ஒரு செயல்களை செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நேற்றைய தினத்தை விட இன்றைய தினத்தில் அதிக வேலை செய்யலாம். யாருக்காவது சிறுசிறு உதவிகள் செய்யலாம்.

6. மனதை திடமாக வைத்துக்கொள்ள யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

7. ஒரு எண்ணத்தை திரும்ப திரும்ப நினைக்கும் போது ஒரு நாளில் அது நடந்து விடும்.அது பாசிட்டிவான எண்ணங்களாக இருப்பின் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணங்கள் உங்களை வழிநடத்தும்.ஒரு நாளில் அது நடந்து விடுகிறது.

8. அதே எண்ணம் நெகட்டிவாக இருப்பின் இப்படி நடந்துவிடுமோ என்ற எண்ணத்திலே உங்களது செயல்களும் அதை நோக்கி நகரும் ஒரு கட்டத்தில் நடந்துவிட கூடும்.

Positive thoughts:எண்ணம் போலவே வாழ்க்கை என்பது 100% உண்மை.என்ன நினைக்கிறோமோ அந்த எண்ணமே மனதில் வலுவாகி எதிர்காலத்தில் நடக்க கூடும்.கீதையில் கூட ஒருவரி உண்டு,என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய்.ஆக,இனி வாழ்வில் எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளலாக இருக்கட்டும்....வாழ்த்துக்கள்..

Sunday, June 7, 2020

புன்னகை செய்

ஏ பெண்ணே, உன் புன்னகை என்னவானது, விற்றுவிட்டாயா?
ஆனால் அதை வாங்கும் அளவுக்கு செல்வம் இவ்வுலகில் இல்லையே,

இல்லை திருடிவிட்டார்களா?
ஆனால் உன்னை பாத்த மாத்திரத்தில் திருடன் அவன் தொழிலை மறந்திருப்பானே!

புன்னகையின் அரசியே,  உன் புன்னகையை யாராலும் எதுவும் செய்யமுடியாது என எனக்கு தெரியும், புன்னகை செய், வாழ்ந்து போகட்டும் இவ்வுலகு.

சாமியின் சிந்தனை.

உழைப்பு

உழைக்காமல் வரும் ஊதியம் கூட 
ஊழல் பணம் போல் தான்.

சாமியின் சிந்தனை