Monday, June 8, 2020

நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள. படித்ததில் பிடித்தது.

நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள

எதிர்மறை எண்ணங்கள் தோன்ற காரணமாக இருப்பது என்ன என்பதை கண்டறிந்து அதனை நீக்கி விட்டாலே போதும் Positive thoughts மனதில் உதயமாகிவிடும்.

எதிர்மறை எண்ணங்கள் உருவாக முக்கிய காரணம், தன்னம்பிக்கை இல்லாமை.

தன்னம்பிக்கை உருவாக உங்களை நீங்கள் பெருமையாகவும் கர்வமாகவும் எண்ணும்படி நடந்துகொள்ள வேண்டும்.எல்லா செயல்களையும் எல்லோராலும் செய்யமுடியும்.ஆனால் அப்படி முடிகிறதா? ஒரு சிலரே அதற்கு சாத்தியப்பட்டவர்களாக உள்ளனர், அந்த சிலர் தன்னமிக்கை கொண்ட பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

1. முதலில் எதையும் உங்களால் செய்ய முடியும் என்பதை வலுவாக நம்புங்கள். நம்பிக்கையூட்டும் வாசகங்களை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

2. எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்,எதையும் எதிர்கொள்ளலாம் என்ற பக்குவத்திற்கு மனதை ஆயத்தப்படுத்துங்கள்.

3. ஒரு விஷயத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் போது,உங்களது எண்ணங்களும் செயல்களும் உங்களது கட்டுபாட்டில் வருகிறது.

4. உன்னால் முடியாது,உனக்கு தகுதியில்லை போன்ற எதிர்மறையான பேச்சுக்களை பேசுபவரிடம் இருந்து தள்ளியிருங்கள்.

5. தினமும் உங்களை நினைத்து பெருமை கொள்ளும் ஏதோ ஒரு செயல்களை செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நேற்றைய தினத்தை விட இன்றைய தினத்தில் அதிக வேலை செய்யலாம். யாருக்காவது சிறுசிறு உதவிகள் செய்யலாம்.

6. மனதை திடமாக வைத்துக்கொள்ள யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

7. ஒரு எண்ணத்தை திரும்ப திரும்ப நினைக்கும் போது ஒரு நாளில் அது நடந்து விடும்.அது பாசிட்டிவான எண்ணங்களாக இருப்பின் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணங்கள் உங்களை வழிநடத்தும்.ஒரு நாளில் அது நடந்து விடுகிறது.

8. அதே எண்ணம் நெகட்டிவாக இருப்பின் இப்படி நடந்துவிடுமோ என்ற எண்ணத்திலே உங்களது செயல்களும் அதை நோக்கி நகரும் ஒரு கட்டத்தில் நடந்துவிட கூடும்.

Positive thoughts:எண்ணம் போலவே வாழ்க்கை என்பது 100% உண்மை.என்ன நினைக்கிறோமோ அந்த எண்ணமே மனதில் வலுவாகி எதிர்காலத்தில் நடக்க கூடும்.கீதையில் கூட ஒருவரி உண்டு,என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய்.ஆக,இனி வாழ்வில் எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளலாக இருக்கட்டும்....வாழ்த்துக்கள்..

Sunday, June 7, 2020

புன்னகை செய்

ஏ பெண்ணே, உன் புன்னகை என்னவானது, விற்றுவிட்டாயா?
ஆனால் அதை வாங்கும் அளவுக்கு செல்வம் இவ்வுலகில் இல்லையே,

இல்லை திருடிவிட்டார்களா?
ஆனால் உன்னை பாத்த மாத்திரத்தில் திருடன் அவன் தொழிலை மறந்திருப்பானே!

புன்னகையின் அரசியே,  உன் புன்னகையை யாராலும் எதுவும் செய்யமுடியாது என எனக்கு தெரியும், புன்னகை செய், வாழ்ந்து போகட்டும் இவ்வுலகு.

சாமியின் சிந்தனை.

உழைப்பு

உழைக்காமல் வரும் ஊதியம் கூட 
ஊழல் பணம் போல் தான்.

சாமியின் சிந்தனை

கதை-கவிதை

கதையினால் மனம் கவிதையாகும்
கவிதையினால் மனதின் கதைகளெல்லாம் கவிதைகள் ஆகும்.

சாமியின் சிந்தனை.

Saturday, June 6, 2020

பயணம்

தினமும் காலையில் வைக்கும்
சிறு தீனிக்காக மூடியிருக்கும் சன்னலை கொத்தி கொத்தி பார்க்குமே பறவை என்று நினைப்பாகவே இருக்கிறது பயணம் முழுவதும்.

சாமி.

Friday, June 5, 2020

மண்ணை முத்தமிடும் மழைத்துளி

மழைத்துளி மண்ணை முத்தமிட்டு
துள்ளி குதிப்பதை பார்த்தால் , தாய்வீடு வந்திருக்கும்  மகளின் மனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

சாமியின் சிந்தனை.

Monday, June 1, 2020

திருமண நாள்

அந்த மூன்று முடிச்சு என்னவோ 
இறுகி கொண்டே தான் இருக்கிறது
14 ஆண்டுகள் கடந்த பின்பும்.