Friday, May 15, 2020

Oxygen Radical Absorbance Capacity

ORAC

ORAC is Oxygen Radical Absorbance Capacity. Higher ORAC, Better will be oxygen carrying capacity of blood & Lungs oxygen capacity. 

In the Future, our survival will be based on our Immunity 

Why spices are important for our Life? Look at their ORAC Values....👍🙏

Clove       : 314,446 ORAC 
Cinnamon : 267,537 ORAC 
Coffee.  : 243000  ORAC
Turmeric  : 102,700 ORAC 
Cocoa    : 80,933    ORAC 
Cumin    : 76,800  ORAC 
Parsley  : 74,349 ORAC 
Tulsi       : 67,553 ORAC 
Thyme    : 27,426ORAC
Ginger     : 28,811 ORAC 

Extracts of Ginger , Tulsi, Turmeric are at least 10 times higher ORAC Values. That's how they become effective.

OXYGEN CARRYING CAPACITY OF THE BLOOD CAN BE ENHANCED USING NATURAL FRUITS, VEGETABLES, SPICES, HERBS ....THAT HAVE HIGH ORAC VALUE!
OXYGEN RADICAL ABSORBANCE CAPACITY

PREVENTS: CANCERS, NEURO - DEGENERATIVE DISORDERS, DIABETES, & SO MANY CHRONIC CONDITIONS

Nature boosts immunity ...

 
High ORAC foods and Nutrients such as iron, vitamin C, Zinc, omega 3, Magnesium and Vitamin D helps boost our body's defence mechanism. 

Apart from Tulsi, Ginger, Pepper, Turmeric, Cinnamon. Clove... herbs like Brahmi, Ashwagandha, Shatavari, Mulethi, Arjunarishtam, Peppermint, coriander seeds, cumin black seeds are catching attention of Scientists.  

So, this is more than any vaccine one need for self immunity. Without any side effects. 

Since 80% of Corona positive patients had no symptoms at all , leaves uncertainity for all of us!
Testing 130 crore population is next to impossible. Even if we test daily 100000 people, we will need over 35 years to just test!

This suggests .... our future is our immunity.... just like intel inside in computers, we have to inbuilt immunity inside!

THIS IS WHAT AYURVEDA HAS BEEN TEACHING ALL ALONG!!

Thursday, May 14, 2020

ஊர் திருவிழா

எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை காக்கும் இரும்பு சங்கிலி,
எங்களையெல்லாம் தன் அருளால் காக்கும் தெய்வ சங்கொலி,
எங்கள் மனதில் இருக்கும் தங்க சங்கதி,
அருள்மிகு மலையேறியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா தள்ளிப்போயிருக்கிறது கொரானாவால். 

இந்த தருணத்தில் என் நினைவில் நடத்திக்கொள்கிறேன் அத்திருவிழாவை,

காப்பு கட்டுவதில் தொடங்கும் கொண்டாட்டம்,
வெளியூர்களில் வசிக்கும் கிராமவாசிகளால் நடத்தப்படும் மண்டகப்படிகள், பூஜைகள்  கலைநிகழ்ச்சிகள் ஊரை கோலாகலம் ஆக்கும்,

தேரில் பவனிவரும் தேவியால் தினம் தினம் கொண்டாட்டம்,
தேரில் பின் வரும் தேவதைகள் அதை காண வரும் தேவன்களின் கூட்டம்,

உறவினர்கள் நண்பர்களால் வீடுகள் பொங்கி வழியும்,
குழந்தைகளால் அல்லோலப்படும் தெருக்கள்,
அன்பாலும் அருளாலும் பொங்கி வழியும் கிராமம்,
உலகில் எங்கு இருந்தாலும் வந்து குவியும் ஊர்க்காரர்கள்,

இளைஞர் இளைஞிகளுக்கு இயல்பான வரன் பார்க்கும் படலம்,
எங்கு பார்த்தாலும் அன்னதானம்,

முத்தமிழில் மூன்றாம் தமிழை வாழ வைக்க நாடக இரவு,
எப்பதவியில் இருப்போரும் படித்தோரும் பாமரரும் தரையில் அமர்ந்து நாடகம் பார்க்கும் சமரசம்,

குழந்தைகள் அடிக்கும் கிட்டி சத்தம் வான் பிளக்கும்,
பெண்கள் போடும் மாவிளக்கு மற்றும் பஞ்சாமிர்தம் ஊரே மணக்கும்,
வாணவேடிக்கைகள், வண்ணவிளக்குகள் ஊரை வானவில்லாக்கும்,
சாலையில் போடப்படும் கோலங்கள் ஊரை வண்ண மயமாக்கும்,

மிட்டாய் கடைகள், பலூன் கடைகள், ராட்டினங்கள்  மேலும் பல விளையாட்டுகள் எல்லோரையும்  கட்டிப்போடும்,

உறவுகளை பேணிப் பாதுகாக்க பாக்கு வைக்கும் வைபவம்,
குழந்தைகளுக்கு உறவினர்கள் தரும் திருவிழா காசு சில நூறை எட்டியிருக்கும்,

பறை, மேளம் மற்றும் கொம்பின் ஓசை விண்ணை அதிரவைக்கும்,
விவசாயத்தில் விளைந்த பொருட்க்களைக் கொண்டு அம்மனுக்கு மதுக்காட்டும் படையல்,
பக்தர்களால் காவடியாட்டம் பால்குடம் முடியிரக்குதல் எவ்வளவோ அன்பின் பொருட்டு,

இந்த ஒரு வாரம் எங்கு பார்த்தாலும் மனித தலைகள் அன்பின் வெளிப்பாடுகள் விசாரிப்புகள் எல்லாம் இயல்பாய் நடக்கும்,
கடைசி நாளில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன்,
காப்பு களைதலில் முடியும் எல்லாம்,
அன்று எல்லோர் மனதிலும் வலி, ஏன் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று,
சிறு பிள்ளையாருக்கையில் அந்த கடைசி நாளில் அழுதிருக்கிறேன் யாருக்கும் தெரியாமல்,

எனக்கு ஒரு பேராசை மட்டுமே உண்டு இறைவா என் வாழ்வில், அடுத்த பிறவி ஒன்று எனக்கு உண்டெனில் , நான் என் ஊரிலேயே திரும்ப பிறக்க வேண்டும் என்பதே அது.

சாமியின் நினைவலைகள்

Tuesday, May 5, 2020

ஆதவனின் வேலை

தன்னில் உள்ள எல்லாவற்றையும்
காட்டிய பின்னும், 
வற்றவைக்கப்பட்டது குளம்.

சாமியின் சிந்தனை.

நம்பிக்கை அழகு

வானம் நட்சத்திரங்களையும்,
நட்ச்சத்திரம் வானத்தையும்
முழுமையாக நம்புகின்றன.
சாமியின் சிந்தனை.

எது அழகு

மண்ணுக்குள் 
இருக்கும் மலர், வேர்.
சாமியின் சிந்தனை


Sunday, May 3, 2020

மகிழ்ச்சிகரமாக_வாழ40_வழிகள்

#மகிழ்ச்சிகரமாக_வாழ40_வழிகள்!!!

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். 

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.  

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.  

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள். 

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள். 

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

வாழ்க வலிமையுடன்!!!

Astro Bakthavachalam...

கொரானா காலம்

எனக்கு நானே முடித்திருத்த முயற்சி செய்தேன்,
என் அகந்தை அழிந்தது.
சாமியின் சிந்தனை.