Showing posts with label தொடுதிரை. Show all posts
Showing posts with label தொடுதிரை. Show all posts

Saturday, May 4, 2024

முதலில் 
கோவில் சாவடிகள் வெறிச்சோடி போயின 

அதன் பின் வீட்டு திண்ணைகள் ஆள் அரவமற்று போய் 
பின் திண்ணையும் இல்லாமல் போயின

 இப்பொழுது வீட்டின் வரவேற்பறையும் 
வெறுமையாய்
ஒவ்வொருவரும் ஒரு அறைக்குள் 

கூடி பேசி உறவையும் அறிவையும்  வளர்த்த இனம் 
ஒரு தொடுதிரைக்குள் ஒளிந்தும் ஒழிந்தும் போவதென்னவோ கொடுமை.

பூமி.சாமி.