இதை முடித்து விட வேண்டும்
என்று குறிக்கோளுடன் தான் தொடங்குகிறது ஒவ்வொரு ஆண்டும்.
மாதங்கள் ஆக ஆக
வைராக்கியம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து
சிறிதேனும் செய்து விட வேண்டும் என்கிறது சிந்தனை
மலை அளவு குறிக்கோள் இருந்தாலும்
மடு அளவு சாதித்து விட முடிகிறது,
குறிக்கோளை முழுமையாய் அடைவது முக்கியமில்லை
குறிக்கோளை குறித்து, முயற்சி செய்வதுதான் முக்கியம் என்கிறது மனது.
மீண்டும் குறிக்கோள்கள் குறித்து தீர்மானம் ஏற்போம் இவ்வாண்டிலும்,
செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையில்.
நம்பிக்கைதான் வாழ்க்கை.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்.
இரா.ரெங்கசாமி.
No comments:
Post a Comment