மலராய் அழகாய் மலர்ந்து நிற்கும்
பேரன்புமிக்க மகளே
குடும்பத்தின் முதல் குத்துவிளக்கு நீ
குணக் குன்று நீ
அன்பின் ஊற்று நீ
பாசத்தின் விளைநிலம் நீ
வெகுளித்தனத்தின் வெளிச்சம் நீ
அக்கறையில் தாய் நீ
எங்களின் நம்பிக்கை நீ
எங்களின் நேத்ரம் நீ
உன்னை மகளாய் பெற்றதில் பேருவகை
கொள்கிறோம்.
இந்நன்னாளில் உன்னை வாழ்த்தி
மகிழ்கிறோம்.
No comments:
Post a Comment