கடவுளை நேரில் தரிசித்து இருக்கிறீர்களா?
எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது
அவருடன் இருக்கையில் என்னை மிக அன்பாக பார்த்துக் கொண்டார்
என்னை கை பிடித்து நடக்க வைத்தார்
நா பழக்கி பேச வைத்தார்
நன்மை தீமைகளை சொல்லி கொடுத்தார்
வான் இடிந்து வீழ்ந்தாலும் அச்சம் படாதே என்றார்
கருணை மழை பொழிந்தார்
தீயவைகள் அண்டாமல் பார்த்துக் கொண்டார்
கண்ணை இமை போல் காத்தார்
அறிவுரைகள் கூறினார்
அன்பை பொழிந்தார்
கண்டிக்கவும் செய்தார்
சிரிக்க வைத்தார்
அழவும் வைத்தார்
மொத்தத்தில் தியாகத்தின் மறு உருவமாய் இருந்தார்
என்ன செய்தாலும் தன் கரங்களில் எப்பொழுதும் என்னை அணைத்தே இருந்தார்
எனக்கும். அவர் சென்றபின் தான் தெரிந்தது அவர் தான் கடவுள் என்று.
அம்மா.
-சாமி.
No comments:
Post a Comment