உழைத்து உழைத்து தன்னை தேய்த்து நம்மை உயர்த்தியவர்,
தான் பெறமுடியாத கல்வியை, வசதியை, வாழ்க்கையை, தன் வாழ்க்கையை வயதை இழந்து வாங்கி கொடுத்தவர்,
எப்பொழுதும் நம் மகிழ்வையே தன் மகிழ்வாக நினைத்து வாழ்பவர்,
கண்டிப்பை சொல்லில் வைத்து கனிவை மனதில் வைத்திருப்பவர்,
நாம் வாழ்வில் ஓங்கி வளர தன்னை மறைத்து தாங்கிப்பிடித்து வேராய் இருப்பவர்,
எனக்கு மிகவும் பிடித்த சொல் 'அப்பா'
பிடித்த செயல் 'உன் கண்டிப்பு',
தந்தையே உன் மறுபெயர் உழைப்பு, உணர்வு, உண்மை, உன்னதம், உயிர்ப்பு எல்லாவற்றிற்கும் மேல் என்னுயிர் உருவாக்கிய என்னுயிர் நீ.
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment