நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?
அது 2004 ஆம் ஆண்டு. அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா. அந்த ஆண்டு பரிசை பெற்றவர் வங்காரி மாத்தாய். அமைதிக்கான நோபல் பரிசு பெரும் முதல் கறுப்பின பெண் அவர். கென்யாவில் பிறந்தவர். பசுமை இயக்கத்தை தோற்றுவித்தவர், கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க பகுதிகளில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் அவரே.
பரிசை பெற்ற அவரிடம், நீங்கள் யார் என்ற கேள்வி வைக்கப்பட்டது. சாதாரண நபர்களாக இருந்திருந்தால் தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டிருப்பார்கள். ஆனால் அவர் வங்காரி மாத்தாய். நான் யார் என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன் என்று தொடங்கினார்.
"காட்டில் தீப்பிடித்து எரிகிறது, அப்போது ஹம்மிங் bird (ரீங்காரச்சிட்டு) ஒன்று நீர்நிலைக்கு சென்று நீரில் மூழ்கி தண்ணீரை அள்ளிச் சென்று தீயை அணைக்க முயல்கிறது. பெரிய தும்பிக்கை இருக்கும் யானை உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் அமைதியாக இருக்க, இந்த சிறிய பறவை மட்டும் பறந்து பறந்து நீர்த்துளிகளை கொண்டுசென்றது. மற்ற மிருகங்கள் இந்த பறவையை பார்த்து சிறிய அலகை கொண்ட நீ என்ன செய்துவிடமுடியும் என்று கேட்கின்றன. அதற்கு பதிலளித்த ஹம்மிங் bird, "என்னால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ, அதை என்னால் முடிந்த அளவிற்கு செய்கிறேன் என்றது". இந்த கதையை சொல்லிமுடித்து வங்காரி மாத்தாய் சொன்னார், "நான் ஹம்மிங் bird" ஆக இருக்க விரும்புகிறேன் என்று.
வாருங்கள், நாம் எல்லோரும் ஹம்மிங் bird ஆக மாறுவோம். வங்காரி மத்தாயின் கைபிடித்து ஆபிரிக்க காடுகளில் உலாவ...
Sunday, January 6, 2019
வங்காரி மத்தாயி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment