ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை உடையவன்.மற்றவர்களோடு ஒப்பிட முடியாது.
ஒப்பீடு அறிவீனம்.இங்கே யாரும் உயர்ந்தவரும் கிடையாது;தாழ்ந்தவரும் கிடையாது.
அவரவர் தன்மையில் அவரவர் உயர்ந்தவரே.
ரோஜாவும் தாமரையும் வித்தியாசமானது.அதனதன் அழகில் அது தனித்தன்மை உடையது.அவைகள் ஒப்பிட்டுப் பார்த்து கொள்வது இல்லை.
ஆனால் மனிதன் மாத்திரம் இதே பிழைப்பாக இருக்கிறான்.
மனித துன்பத்திற்கு இதுவே அடிப்படைக் காரணம்.
#ஓஷோ
No comments:
Post a Comment