தியானம் என்பது ஒரு முறிப்பு (jump).
மனதைப் பயன் படுத்திக் கொண்டே இருந்தால் மனதுக்கு அப்பால் ஒரு போதும் போகவே முடியாது.
அதிலிருந்து நீங்கள் முறித்துக் கொள்ள வேண்டும்.அந்த முறிப்பே
தியானம்.இது பகுத்தறிவுக்கும், தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டது.
யோசிக்காது முயன்று பாருங்கள்.
கண்களை மூடுங்கள்.எண்ணம் தோன்றுகிறது.நுட்பமாகப் பாருங்கள்.அதைப்பற்றி சிந்திக்காதீர்கள்.வெறுமனே பாருங்கள்.விரைவில் அதுவாகவே போய்விடும்.
மற்றொரு எண்ணம் அந்த இடத்துக்கு வருகிறது.இந்த எண்ண ஓட்டத்தை சலனமில்லாமல் பார்த்துக்கொண்டே இருங்கள்.
யோசனையின்றி பார்த்துக் கொண்டிருக்க முடிந்தால்;சாட்சியாய் இருப்பது பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டீர்கள்.
சிந்தித்தல் மனதின் செயல்பாடு.சாட்சியாய் இருத்தல் மனதின் செயல் கடந்த தன்மை.
மனதை முறித்துக் கொண்டு; மனம் செயல்படாது இருக்கும் போது நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள்.
அப்போது தான் நீங்கள் விழிப்புணர்வில் இருக்கின்றீர்கள்.
#ஓஷோ
No comments:
Post a Comment