Monday, January 21, 2013

தாய் தமிழ்

முன்னூறு வரியில் நிரல் எழுதுவதை விட ,

முன்று  வரியில் கவிதை எழுதுவதே மனதுக்கு பிடிக்கிறது 

Friday, December 9, 2011

நன்றி கெட்ட ---------

நிகழ்கால சுகத்தில் கடந்த காலத்தை மறந்த

உனக்கு ,எதிர்காலம் கசந்த காலம் ஆகும்போது

கடந்த காலம் ஞாபகம் வரும்.

Tuesday, November 22, 2011

சுயநலம்

குடும்பம் ,ஒற்றுமை ,பாசம், அன்பு , அக்கறை

எல்லாவற்றையும் நாம் பேசுவோம்,

நமது சுயநலம் பாதிக்காதவரை.

இப்பொழுதே செய்து முடி

ஒத்திபோடுவதை ஒத்திபோடும் நாளே,
உன் வெற்றிக்கு ஒத்திகை பார்க்கும் நாள்.

Friday, August 12, 2011

பாசம்

பக்கத்தில் இருக்கும் உதவியவனுக்கு
நன்றி உணர்வை காட்டமறந்த நான்,
பஸ் ஏறி ரயிலேறி
கோயில் கோயிலாய்
நேர்த்திகடன் செலுத்தினேன்

மனைவி

கணவனே கண் கண்ட தெய்வம் ,
பக்தை சொல்வதை தெய்வம் கேட்க்கும்வரை.

Thursday, July 28, 2011

மனைவி

ஆண்கள் எல்லோர்க்கும் தாயே முன்னறி தெய்வம்,
திருமணம் ஆகும்வரை.