நீ இவ்வளவு இன்னல்களை தந்த பின்னும்
உனக்கு சொல்வதற்கு நன்றிகள் உள்ளன என்னிடம்
நீ இவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தப்பின்னும்
உன்னிடம் காட்டுவதற்கு அன்பு இருக்கிறது என்னிடம்
நீ மோசமாக கோபபட்டபின்னும்
உன்னை பார்த்து புன்னகைக்க
மனம் இருக்கிறது என்னிடம்
நீ இவ்வளவு நடித்தபின்னும்
உன்னிடம் உண்மையான அக்கறையுடன்
இருப்பதற்கு காரணங்கள் உள்ளன என்னிடம்
நீ இவ்வளவு ஏமாற்றிய பின்னும்
எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது உன்னிடம்
-பூமி.சாமி