Friday, October 15, 2021

முதுமை

'Money' க்காக மணிப்பார்க்காமல்
ஓடும் உலகில், 
அலைபேசி மணி அடிக்குமா பேசுவதற்கு என ஏங்கி நகர்கிறது முதுமை.

-சாமி.

Thursday, October 14, 2021

படித்ததில் பிடித்தது:ரத்தன் டாடா சொன்ன வரிகள் .

ரத்தன் டாடா சொன்ன வரிகள் .

                           இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்.

          நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது.

                   நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை .

         எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம்.

             நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.

        எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது .

      உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள்.

        என்னதான் ஆகிவிடும்..? ஒரு கை பார்த்துவிடலாம். இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள் தான்.

          மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது..? நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது..? 

            அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம்.

                இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.

        செத்துப்போவது பெரிய காரியமே இல்லை. ஒன்றரை நிமிட வேலைதான். அதோடு எல்லாம் முடிந்தது. 

        ஆனால் இனி எந்தக் காலத்திலும் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டோம்?

               நம் அத்தனை சுமைகளையும் துன்பங்களையும் தூக்கி நம்மைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்பின் அர்த்தமா?

       ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது. 

           மனிதர்கள் நமக்கு என்ன? நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்?

                நம்மிடம் உயிர் இருக்கிறதா..? தெளிவான சிந்தனை இருக்கிறதா? அது போதும். எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்துவிடலாம்.

                  நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான்.

             அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.

Wednesday, October 13, 2021

அதிகாரம்/Chapter: துறவு / Renunciationகுறள் 341

:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.




ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.


Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

Saturday, October 9, 2021

இறையன்பு Ias..அருமையான பதிவு

இறையன்பு Ias..
அருமையான பதிவு

*இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.*

*ஆனால்  பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!!*
   
*கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது.*

 *ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!*.
   
*ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது.*

*எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை!!!*.
   
*வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது.*

 *சொந்தப் பெற்றோரிடம் தூக்கியடிப்பது போல பேசத்தான் முடிகிறது!!!*.
 
 *எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது.*

*ஆனால்*
 *அவர்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோரின் வலி* *புரிவதில்லை.!!!*
  
*எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.!!!*
                  
~ *இறையன்பு.IAS*

அருமையான பதிவு 👍

Thursday, October 7, 2021

ஏரிக்கரை ஆலமர ஊஞ்சல்

ஏரிக்கரை ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆட
என் நிழல் தண்ணீரில் மீனோடு சேர்ந்து ஓடும்.

-சாமி.

Monday, October 4, 2021

முழுநிலவு

தொடுதிரையில் செயலியை நகர்த்துபோல் 
மேகத்தை விரலால் விலக்கி பார்க்க முயல்கிறேன் முழு நிலவை
மீண்டும் மீண்டும் மறைந்து கொள்கிறது இன்னொரு மேகத்திற்கு பின்னால்
நகர்த்துவதை நிறுத்துகிறேன்
அதுவாய் எட்டிப்பார்கிறது என்னை.

-சாமி.

Sunday, October 3, 2021

நாக்கு உடற்பயிற்சி-அல்சைமர்

படித்ததில் பயனுள்ளது

அமெரிக்காவிலிருந்து வந்த செய்தி, ஸ்ரீ.சதிரெட்டி கரு, அவருடைய மகன் ஒரு டாக்டராக இருக்கிறார்:

 50 வயதிற்குப் பிறகு
 ஒருவர் 
 பல வகையான நோய்கள் அனுபவிக்கலாம். 
  ஆனால் நான் மிகவும் கவலைப்படுவது அல்சைமர் தான்.
 என்னை நானே கவனிக்க முடியாது என்பது மட்டுமல்ல,
 ஆனால் அது
 குடும்ப உறுப்பினர்களுக்கு நிறைய அசகரியங்கள் ஏற்படுத்தும் ...

 ஒரு நாள், என் மகன் ராகுல்
 வீட்டிற்கு வந்து என்னிடம் கூறினார்
 ஒரு மருத்துவர் நண்பர்
 நாக்கைப் பயன்படுத்தி அவருக்கு ஒரு பயிற்சியைக் கற்றுக் கொடுத்தார்.

 அல்சைமர் வருவதைக் குறைக்க நாக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும், மேலும் குறைக்க / மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்

 *1* உடல் எடை
 *2* உயர் இரத்த அழுத்தம்
 *3* மூளையில் இரத்த-உறைவு
 *4* ஆஸ்துமா
 *5* தொலைதூர பார்வை
 *6* காது ஒ(வ)லி
 *7* தொண்டை தொற்று
 *8* தோள்பட்டை / கழுத்து தொற்று
 *9* தூக்கமின்மை

 நகர்வுகள் மிகவும் எளிமையானவை மற்றும் கற்றுக்கொள்வது எளிது ....

 ஒவ்வொரு காலையிலும், உங்கள் முகத்தை கழுவும்போது, ​​கண்ணாடியின் முன், கீழே உள்ள உடற்பயிற்சியைச் செய்யுங்கள்:
 
 * உங்கள் நாக்கை நீட்டி வலதுபுறமாக பின் இடதுபுறமாக 10 முறை நகர்த்தவும் *

 நான் தினமும் என் நாக்கை உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதிலிருந்து, எனது மூளைத் தக்கவைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது.

 என் மனம் தெளிவாகவும் புதியதாகவும் இருந்தது, மேலும் பிற மேம்பாடுகளும் இருந்தன ...

    1 தொலைநோக்கு பார்வை
         குறைவாக
    2 முட்டாள்தனம் இல்லை
    3. மேம்பட்ட ஆரோக்கியம்
    4. சிறந்த செரிமானம்
    5. குறைந்த காய்ச்சல் / சளி

 நான் வலிமையானவன், சுறுசுறுப்பானவன்.

  *குறிப்புகள்*

 நாக்கு உடற்பயிற்சி அல்சைமர்ஸைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது ...
 நாக்குக்கு பெரிய மூளையுடன் தொடர்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.  நம் உடல் பழையதாகவும் பலவீனமாகவும் மாறும்போது, ​​தோன்றுவதற்கான முதல் அறிகுறி என்னவென்றால், நம் நாக்கு விறைப்பாகி விடுகிறது, பெரும்பாலும் நாம் நம்மைக் கடிக்க முனைகிறோம்.

 உங்கள் நாக்கை அடிக்கடி உடற்பயிற்சி செய்யுங்கள்
 மூளையைத் தூண்டும்,
 நம் எண்ணங்களை சுருங்குவதைக் குறைக்க உதவுகிறது, இதனால் ஆரோக்கியமான உடலை அடையலாம்.
 🙏
 👨👨👨👨‍🔬 மூத்த குடிமக்களுக்கு 👨👨👨👨‍  தயவுசெய்து இதை அனுப்பவும்