Wednesday, May 12, 2021

வாழ்க்கையின் ஆசான்கள்.

வகுப்பெடுக்கும் ஆசான்கள் எல்லாம்
வாழ்க்கையின் ஆசான்களாக இருப்பதில்லை.

-சாமி.

*🌹அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!*🌹

*🌹அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!*🌹

*🟪அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.🟪*

*🟣தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...*🟣

*🟢1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.*

*🟢2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.*

*🟢3. சூடான தண்ணீரை குடிக்கவும்.*

*🟢4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.*

*🟢5. முட்டைகளை சாப்பிடுங்கள்.*

*🟢6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.*

*🟢7. பாதாம் சாப்பிடுங்கள்.*

*🟢8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.*

*🟢9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.*

*🟢10. நாட்டுக்கோழி  சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும்.*

*🟢11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.*

*🟢12. அதிக தண்ணீர் குடியுங்கள்.*

*_🟦பிறருக்கு பயன்படும்  என்ற நோக்கத்துடன் இத்தகவலை குழுவில் பகிர்வதும் தொண்டுதான்...!_🟦*


*💜என்றும் சமூக அக்கறையுடன் ..💜

Thursday, May 6, 2021

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*

இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.

*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.*

*அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.*

*2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.*

*உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.*

*3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்*.

*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான  நான்காவது பாடம்.*

*5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.*

*6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.*

*7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா? என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .*

*8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.*

*9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******************Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.*

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, அழுதாய்...*
*உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*

*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.*

*3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.*

*4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*. 
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*

*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.*

*6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.* 
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*

*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*

*8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*

*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*

*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*

*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*

*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.

*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*

*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*

*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*

*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*

*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*
*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"

*மேற்கண்ட *கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்*!

*இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது, கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல் வாழ்வதே ஒரு பெரிய யோகம்*.

*படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.*

Tuesday, May 4, 2021

வாதம் பித்தம் சிலேத்துமம்

💐உங்களுக்கு நீங்களே
வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆச்சரியமாக இருக்கின்றதா..?

    இதை படித்து முடித்த பின்னால் பாருங்கள் நீங்களும் ஒரு வைத்தியராக தான் இருப்பீர்கள்

அப்படியான ஒரு பதிவுதான் இது

    முதலில் மனிதன் நோய் இல்லாமல் இருப்பதற்கும் நோயுடன் இருப்பதற்கும் என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும்
   
    கண்டறிவதற்காக சித்தர்கள் சொன்ன சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம்

    வாதம் பித்தம் சிலேத்துமம் எனும் முக்குணங்களும் நமது உடலில் மாறுபடாமல் இருந்தால் நமக்கு எந்த நோயும் வருவதில்லை இந்தக் குணங்களில் மாறுபாடு ஏற்பட்டு விட்டால் எல்லா நோய்களும் நமக்குள்ளே வந்துவிடுகிறது 

      முக்குணங்கள் மாறுபாட்டால் நோய்கள் வருகின்றது என்பதனை அறிந்து கொண்டோம் எனவே நமது உடலில் முக்குணங்களில் எது ஒன்று அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டால் போதும் அடுத்த நொடியே நமக்கு நாமே வைத்தியம் செய்து கொள்ள தயாராகி விடுவோம்
   
அதற்கான வழிகள்

நமது உடலில் வாதத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்

1 உடலெங்கும் வலிகள் உண்டாகும்

2 உடலில் அடிக்கடி புரட்டல் ஏற்படும்

3 நெஞ்சு கரிப்பதுடன் புளித்த ஏப்பம்          
    வரும்

4 உடலில் வாதம் ஏற்பட்டு விட்டால்              எச்சில்  சுவை  சற்று  புளிப்பாக இருக்கும்

5 சிறுநீரின் நிறம் தண்ணீரைப் போல வென்மையானதாக இருக்கும்

இதுவே வாதம் மிகுதியானால்உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
வாத குணம் உள்ளவர்கள் பகலில் தூங்கக் கூடாது

அடுத்து

நமது உடலில் பித்தத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்

1 கண்களில் பீளை வழியும்

2 அடிக்கடி தலைவலி உண்டாகும்

3உடலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விட்டாலும் உடனே காய்ச்சல் வந்துவிடும்
.
4 நாக்கில் வறட்சி உண்டாகும்

5 எச்சிலின் சுவை சற்று கசப்பானதாக இருக்கும்

6 கை கால்களில் எரிச்சல் உண்டாகும்

7 சிறுநீரின் நிறம் சற்று மஞ்சளாக இருக்கும்

இதுவே பித்தம் மிகுதியானால்
உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
பித்த குணம் உள்ளவர்கள் கடும் வெயிலில் உலாவக் கூடாது

அடுத்து

நமது உடலில்  சிலேத்துமத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்

1 உடலில் அடிக்கடி சளி உண்டாகும்

2 இளம் வெயிலில் சென்றால் கூட அதிகமாக வியர்வை சுரக்கும்

3 சில நேரங்களில் நெஞ்சு வலி உண்டாகும்

4 எச்சிலின் சுவை சற்று இனிப்பானதாக இருக்கும்

5 அடிக்கடி தொண்டையில் கபம் கட்டிக் கொள்ளும்

இதுவே சிலேத்துமம் அதிகமானால் உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
சிலேத்தும குணமுள்ளவர்கள் குளிர்ச்சியான பொருட்களை உண்ணக் கூடாது குளிர் காற்றில் உலாவ கூடாது

   நமது உடலில் எந்த குணம் மிகுதியாக இருக்கிறது என்பதை மேலே சொன்ன அறிகுறிகள் மூலமாக நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம்

சரி

வாதத்தின் குணம் அதிகமாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டால்

அதற்கான வைத்திய முறை

தேவையான பொருட்கள்

இஞ்சி 500 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்

செய்முறை

     இஞ்சியின் மேல்தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு விட வேண்டும் இதில் சுத்தமான தேனை ஊற்றி நன்றாக கிளறி பத்துநாட்கள் இதை வெயிலில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்
    
   இதுவே வாத குணத்தை சம நிலைப்படுத்தும் மருந்து 

இதை காலை வேளையில் மட்டும் ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இதனால் வாதம் என்கின்ற குணம் சமநிலைப்படும்

பித்தத்தின் குணம் நமது உடலில் அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொண்டால்

அதற்கான வைத்திய முறை

தேவையான பொருட்கள்

சுக்கு 500 கிராம்
தரமான பனை வெல்லம் 500 கிராம்

செய்முறை
.
    சுக்கின் மேல் தோலை சீவிவிட்டு இதை சூரணம் செய்து கொள்ளவேண்டும் இதனுடன் பனை வெல்லத்தையும் தூள் செய்து சுக்குடன் கலந்து பத்திரப்படுத்தி கொள்ளவும்

     இதுவே பித்த குணத்தை சமநிலைப்படுத்தும் மருந்து

     இதை மதிய வேளையில் ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் பித்தக் குணம் சமநிலைப்படும் 

அடுத்து

      சிலேத்துமத்தின் குணம் நமது உடலில் அதிகமாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டால்

அதற்கான வைத்திய முறை

தேவையான பொருள்

நல்ல உயர்தரமான கடுக்காய் ஒரு கிலோ

செய்முறை

    கடுக்காயை உடைத்து கடுக்காயின் விதையை நீக்கி விடவேண்டும் மேல் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும் இதை தண்ணீர் சம பாதியாக கலந்த பசும் பாலில் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும் அதன் பின் இதை சூரணம் செய்துகொண்டு பத்திரப்படுத்திக் கொள்ளலாம்

இதுவே சிலேத்துமத்தை சமநிலைப்படுத்தும் மருந்து

    இதை மாலை வேளையில் ஒரு மண்டல காலம் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வருவதினால் இதன் பயனாக நமது உடலில் உள்ள சிலேத்துமத்தின் குணங்கள் சமநிலை பட்டுபடும்

       அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறிய முடியாதவர்களுக்கும் ஒரு உபாயம் இருக்கின்றது மேலே சொன்ன மூன்று மருந்துகளையும் சொல்லிய வண்ணம் செய்து வைத்துக்கொண்டு காலை  மதியம் மாலை என மூன்று வேளையும் மூன்று மருந்துகளையும் முறையாக ஒரு மண்டல காலம் இந்த மருந்தை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதன் விளைவாக நமது உடலில் இருக்கும் வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று குணங்களும் சமநிலை பட்டு இதனால் உடலில் தோன்றிய நோய்கள் அனைத்தும் நீங்குவதற்கு இந்த மூன்று மருந்துகளும் உதவியாக இருக்கும்

     பெரியதொரு பத்தியம் இல்லாமல் எல்லோரும் சாப்பிட கூடிய ஒரு மருத்துவ முறை தான் இது இதை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது  

இல்லறவாசிகளுக்கு இது ஒரு எளிதான காயகல்பமாகும்

     இந்த சிறிய வைத்தியமுறையால் அப்படி என்ன ஒரு பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கலாம் நிஜம்தானா என்ற கேள்வியும் எழலாம் இந்தக் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய பாடல் வரியை பார்ப்போம்

காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் தானுன்ன 
கோலை ஊன்றி குனிந்து நடப்பவன்
குமாரனாகி குலாவத் துடிப்பானே

பாடலுக்கு உண்டான அர்த்தம் என்னவென்றால்

காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்

      என ஒரு மண்டல காலம் உண்ண வேண்டும் அப்படி சாப்பிட்டு வருவதினால் கோலை ஊன்றி குனிந்து நடப்பவன் கூட குமரனின் சக்தியை பெறுபவனாக மாறி விடுவான் என்பதே இதன் அர்த்தம்

      அப்படி என்ன ஒரு அற்புதம் இந்த மருந்தினால் நடந்துவிடப் போகிறது என்பதை பார்ப்போமா பார்ப்போம் வாருங்கள்

    இந்த மருந்துக்கு வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற முக்குணங்களை சமநிலை படுத்தும் ஆற்றல் இருக்கின்றது முக்குணங்களை சமநிலை படுத்துவதினால் நமது உடலில் நோய்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல்

ரத்தமும் நன்றாக ஊறும்
விந்து சுரப்பும் அதிகரிக்கும்

      நமது உடலில் உள்ள சப்த தாதுக்களான நிணநீர் இரத்தம் தசை கொழுப்பு எலும்பு மச்சை சுக்கிலம் என்கின்ற அனைத்தும் பலம் பெறுவதற்காக இந்த மருந்து பயன்படுகின்றது என்பதை சொல்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்  

     இப்படியான ஒரு மருந்தை நீங்களே செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 

அதன் விளைவாக நல்ல

         நல்லதொரு பயன்களை அடைந்து 
நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் என்பதனையும் இங்கே பதிவு செய்கின்றேன்

 இந்தப் பதிவை படித்து முடித்துவிட்டீர்கள் 

இப்போது இந்த மருந்தை செய்ய தயாராகி இருப்பீர்கள் 
இப்போது சொல்லுங்கள் நீங்களும் வைத்தியர் தானே

ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது

நன்றிகளும்
பிரியங்களும்.💐
*FORWARD MESSAGE*
*என்றும் தேசப்பணியில்,*

*"சமூகன்" எம்.சரவணக்குமார்@எஸ்.கே*
*<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு*
*மதுரை*👈🇮🇳🚀🌍
*வாட்ஸ் ஆப் எண்கள்*
*9842171532*
*9444771532*🌺🌻🌹
*முகநூல்: SMS KING SK*

Friday, April 30, 2021

நட்பு - நம்பிக்கை

நட்பில் நம்பிக்கைதான் பிடிப்பு
நம்பிக்கை இல்லையேல் 
அந்த நட்பு வெறும் நடிப்பு.

-சாமி.

Thursday, April 29, 2021

ஓஷோ சொன்ன கதைகள் 16- கூட்டத்தின் பலம்

ஓஷோ சொன்ன கதைகள் 16- கூட்டத்தின் பலம்
..
உனது மனதின் உள்ள விஷயங்கள் அனைத்தும் கட்டுதிட்டத்தினாலும் திட்டமிடுதலாலும் உருவாக்கப்பட்டவைதான். சமுதாயம் இதைத்தான் செய்கிறது. நாம் கடந்த காலம் முழுவதும் இது போன்ற அசிங்கமான வகையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

அங்கு அப்படி எதுவும் இல்லாத போதும் மற்றவர்களால் அது உருவாக்கப்படுகிறது என்ற கருத்தை எனது பேராசிரியர்களில் ஒருவர் ஏற்றுக் கொள்ள வில்லை. நான் இதை நிருபிக்கிறேன் என்று நான் கூறினேன்.. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும், அவரது மனைவியும் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். நான் அவரது மனைவியிடம் சென்று, நாளை காலை பேராசிரியர் எழுந்தவுடன், நீங்கள் அதிர்ச்சியடைந்தது போல காட்டிக் கொண்டு அவரிடம் சென்று, என்னாயிற்று உங்களுக்கு? இரவு படுக்கைக்கு செல்லும்போது நன்றாகத்தானே இருந்தீர்கள்! இப்போது உங்களது முகம் வெளுத்தாற்ப்போல இருக்கிறதே, உடம்பு சரியில்லையா உங்களுக்கு? எனக் கேட்க வேண்டும் எனக் கூறினேன்.

அடுத்த நாள் காலை பேராசிரியர் இதை உடனே மறுத்து விட்டார். அவர் “என்ன உளருகிறாய்? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்”. என்று கூறி விட்டார்.

நான் அடுத்ததாக அவரது தோட்டக்காரரிடம், “அவர் தோட்டத்துக்கு வந்தவுடன் நீங்கள், என்னவாயிற்று? கடவுளே! என்ன நிகழ்ந்தது? உங்களால் நடக்க முடிய வில்லை, நீங்கள் நடுங்குகிறீர்கள். உங்களுக்கு என்னவோ நடந்து விட்டது, உள்ளே சென்று உட்கார்ந்து ஓய்வு எடுங்கள். நான் போய் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று கூற வேண்டும்.” என்று கூறினேன்.

மேலும் நான் இவர்கள் இருவரிடமும் அவர் என்ன கூறினாரோ அதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே எழுதி வையுங்கள். நான் வந்து பெற்றுக் கொள்கிறேன். என்று கூறினேன்.

அவர் தோட்டக்காரரிடம், “ஆமாம், என்னவோ போல இருக்கிறது, நான் ஓய்வு எடுக்க வேண்டும், என்னால் பல்கலைகழகத்துக்கு போக முடியாது. ஆனால் டாக்டரை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை.” எனறார். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார். எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அவர் பல்கலைகழகத்துக்கு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ போவதாக முடிவெடுத்தார்.

அவர் செல்லும் வழியில் நான் நம்பும் பலரிடமும் சொல்லி வைத்தேன்…. அடுத்ததாக வழியில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார், நான் அவரிடம், “நீங்கள் மிகவும் வேலையாக இருந்தால் கூட தவற விட்டு விடாதீர்கள். பேராசிரியர் உங்களை கடந்து செல்லும் போது எங்கே செல்கிறீர்கள்?, என்ன செய்கிறீர்கள்?, உங்களுக்கு பயித்தியமா? உங்களுக்கு உடம்பு சரியில்லை, நீங்கள் என் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுங்கள், நான் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். அவர் கூறுவதை குறித்துக் கொள்ளுங்கள்.” என்றேன்.

நான் குறிப்புகளை சேகரித்து கொள்கிறேன் என்று கூறினேன்.

பேராசிரியர், “ஆமாம், நேற்று இரவிலிருந்து என்னவோ தவறாகிப் போனது போல ஒரு உணர்வு. என்ன தவறாகிப் போனது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் என்னவோ சரியில்லை. நான் இன்னும் நெடுநாள் வாழப் போவதில்லை என்பது போன்ற ஒரு அச்சம், ஒரு நடுக்கம் உள்ளே ஓடுகிறது.” என்றார்.

அவரது வீடும் பல்கலைகழகமும் கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவர் எப்போதும் நடந்துதான் போவார். ஆனால் அன்று அவர் வழியில் வந்த மற்றொரு பேராசிரியரின் காரை நிறுத்தி, “என்னால் நடந்து பல்கலைகழகத்தை வந்தடைய முடியுமா என்று தெரியவில்லை”. என்றார்.

பல்கலைகழகம் இருந்த இடம் மலைப்பகுதி, மேடும் பள்ளமுமானது. இவரது வீட்டிலிருந்து அவரது தத்துவ பிரிவு இருந்த இடம் மேடானது. அந்த பிரிவு மலைஉச்சியின் மீது அமைந்திருந்தது. அவரது வீடு கீழே பள்ளத்தில் இருந்தது.

பேராசிரியர், “எனக்கு மூச்சு வாங்குகிறது… உடம்பு நடுங்குகிறது. எனக்கு காய்ச்சல் என்று நான் நினைக்கிறேன். என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனக்கு என்னமோ போல் இருக்கிறது”. எனக் கூறி லிப்ட் கேட்டார்.

அவரை கடந்து போன பேராசிரியரும் என்னால் அனுப்பி வைக்கப்பட்டவரே. அவர் மிக மோசமான நிலையில் இருப்பதைப் போல நீங்கள் காரை நிறுத்தி, என்ன பிரச்னை என கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.. காருக்குள் இவர், “நீங்கள் வந்திருக்கக் கூடாது, நீங்கள் டாக்டரிடம் போயிருக்க வேண்டும். உங்களது கண்கள் பஞ்சடைத்துப் போயிருக்கிறது, உங்களது முகம் வெளுத்துப் போயிருக்கிறது, பழுதாகிப்போன ஓவியம் போல இருக்கிறீர்கள். ஒரே நாள் இரவு என்னவாயிற்று? இரவில் ஹார்ட் அட்டாக் வந்ததா என்ன? அது மிகவும் மோசமாக பாதித்திருக்கும் போலிருக்கிறதே.” என்று கூறினார்.

அதற்கு அவர், “நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்போல இருக்கிறது. அப்போது எனக்குத் தெரியவில்லை, இப்போது என்னால் உணர முடிகிறது. எல்லா விதமான அறிகுறிகளும் எனது வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது போல காட்டுகிறது”. என்றார்.

அவர், தத்துவ பிரிவுக்குள் நுழையும் போது அங்கு வாசலில் உட்கார்ந்திருக்கும் பியூனிடம் நான், அவர் வந்தவுடன் நீ உடனே எழுந்து அவரை தாங்கிப் பிடித்துக் கொள் என்று கூறியிருந்தேன்.

அவன், “ஆனால் அவர் மிகவும் கோபப்படுவாரே, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. நீங்கள் இதுபோல இதற்கு முன் கேட்டதே இல்லையே.” என்றான்.

அதற்கு நான், “நானும் பேராசிரியரும் ஒருவிதமான பரிட்சார்த்தமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். நீ, நான் சொல்வதை மட்டும் செய். குறுக்கிடாதே. நீ அவரை பிடித்துக் கொண்டு, நீங்கள் விழ இருந்தீர்கள் என்று சொல்.” என்றேன்.

அவனும் அப்படியே செய்தான். பேராசிரியர் அவனுக்கு நன்றி கூறினார். அநத பியூன் அவரிடம் நீங்கள் கீழே விழ இருந்தீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவரே அவனிடம், “நீ இங்கில்லையென்றால் நான் கீழே விழுந்திருப்பேன்!” என்று கூறினார்.

பிரிவினுள்ளே நான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் அவரைப் பார்த்தவுடன், “கடவுளே, நீங்கள் ஆவி போல காணப்படுகிறீர்கள், உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டேன். அவரைப் பிடித்து, ஒரு சாய்வான நாற்காலியில் உட்கார வைத்தேன்.

அவர், “ஒரு விஷயம் நான் உன்னிடம் சொல்ல வேண்டும். என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். – அவருக்கு இரண்டு குழந்தைகள் – என்னுடைய மனைவி அனுபவமற்ற சிறிய பெண். என் தாயும் தந்தையும் இறந்து விட்டனர். வேறு யாரும் எனக்கு கிடையாது. நான் போய் விட்டால் அவர்களை காப்பாற்ற கூடிய வேறு யாரையும் எனக்குத் தெரியாது. நான் உன்னைத்தான் நினைத்தேன்” என்றார்.

நான், “நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் மனைவி ஆகியோரை உங்களை விட நன்றாக வைத்துக் காப்பாற்றுவேன். ஆனால் நீங்கள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் நான் உங்களிடம் சில குறிப்புகளை காண்பிக்க விரும்புகிறேன்.” என்றேன்.

அவர், “சில குறிப்புகளா என்ன?” என்றார்.

“நான் போய் அவற்றை சேகரித்துக் கொண்டு வருகிறேன்” என்றேன்.

அவர், “யாரிடமிருந்து?” என்று கேட்டார்.

நான், “உங்கள் மனைவி, உங்கள் தோட்டக்காரர், போஸ்ட் மாஸ்டர், உங்களை இங்கே இறக்கி விட்ட பேராசிரியர், நீங்கள் விழாமல் உங்களை பிடித்த பியூன்.” என்றேன்.

அவர், “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டார்.

நான், “இதெல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். இல்லாத ஒன்றை வைத்து மனிதனை ஏமாற்ற முடியாது என நீங்கள் சொல்ல வில்லை?” என்றேன்.

நான் சென்று எல்லா குறிப்புகளையும் பெற்று வந்தேன். அதை ஒவ்வொன்றாக அவரிடம் காண்பித்தேன். மேலும் நான் அவரிடம், “எப்படி நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்று நீங்களே பாருங்கள். ஒன்றுமில்லை என்பதை உங்கள் மனைவியிடம் முற்றிலுமாக மறுத்தீர்கள். தோட்டக்காரரிடம், ஒரு வேளை ஏதாவது இருக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் அது ஒருவேளை என்றுதான் இருக்கிறது. அதில் உங்களுக்கு உறுதி இல்லை. ஆனால் அந்த எண்ணம் வந்து விட்டது. போஸ்ட் மாஸ்டரிடம், ஆமாம், ஏதோ ஆகி விட்டது. காலையிலிருந்து ஏனோ நான் மிகவும் நன்றாக இல்லாமல்தான் இருக்கிறேன், மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறி இருக்கிறீர்கள். பேராசிரியரிடம் காரில் வரும்போது நீங்களே தூங்கும்போது ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாக ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறீர்கள் – அவர் மிகவும் வலிமையுள்ள மனிதர் – தத்துவ பிரிவு வரை நடந்து வர முடியாது என நீங்களே நினைத்தீர்கள். மேலும் அந்த பியூன் குதித்து உங்களை தாவிப் பிடித்துபோது, நீங்கள் நான் விழ இருந்தேன், பிடித்துவிட்டாய், மிகவும் நன்றி என்று கூறியிருக்கிறீர்கள். இது உங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு கருத்து. அவ்வளவுதான்.” என்று கூறினேன்.

என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா? இதை தொடர்ந்து நிகழ்த்தியிருந்தால் இந்த மனிதன் இறந்து போகக்கூடும். ஒரு தர்க்க வாதத்தில் அவர் ஒத்துக் கொள்ளாத ஒரு நிலையை நான் நிரூபிக்க முயன்றேன், அவ்வளவுதான். அவர் இறந்து போவதை நான் விரும்ப வில்லை. இல்லாவிடில் டாக்டரிடம் பேசி, அவர், “உனது நாட்கள் எண்ணப்படுகின்றன, அதனால் என்ன செய்ய விரும்புகிறாயோ – உயில் எழுதுவது மற்றும் வேறு ஏதாவது – அதை செய். நான் உதவக்கூடியது எதுவுமே இல்லை, உனது இதயத்தின் வாழ்நாள் முடிந்து விட்டது. அது எந்த நிமிடமும் ஓய்வெடுத்துக் கொள்ளக்கூடும்.” என்று அவரை சொல்ல சொல்லியிருக்கலாம். நான் அவரை ஒரு கருத்தின் மூலமாக கொன்றிருக்க முடியும். இந்த குறிப்புகளை பார்த்த உடனேயே அவர் சரியாகி விட்டார், மிகவும் ஆரோக்கியமாகி விட்டார். அவர் சிரித்துக் கொண்டே பியூனைப்பார்த்து, “அவர் சொல்வதை கேட்காதே, அவர் மிகவும் அபாயகரமான மனிதர், அவர் கிட்டதட்ட என்னை கொன்று விட்டார்,” என்றார், மேலும் அவர் அந்த மற்றொரு பேராசிரியரிடம், “இது சரியல்ல, நீ எனக்கு ஹார்ட் அட்டாக் என்று பரிந்துரை செய்தாய்” என்று கூறினார். போஸ்ட் மாஸ்டரிடம், “நீங்கள் எனது பக்கத்து வீட்டுக்காரர், என்னை இறப்பு வரை தள்ளுவது சரியா” என்று கேட்டார்,

அவர் மிகவும் கோபமடைந்தது தனது மனைவியிடம்தான். அவர், “அவன் மற்ற எல்லோரையும் சரி கட்டிவிட்டான். – அவர் எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருந்தார் – ஆனால் என்னுடைய மனைவியே என்னை ஏமாற்றி விட்டாள், அவன் பேச்சைக் கேட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் ஒரு வாத போட்டியில் இருந்தோம், அது என்னுடைய மதிப்பு மரியாதை சம்பந்தப்பட்டது, நீ அதை கெடுத்துவிட்டாய்” எனக் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் அவரது மனைவி, “நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும், இல்லாத ஒன்றிற்காக மனிதனை கட்டுதிட்டம் செய்ய முடியும் என அவர் உங்களுக்கு நிரூபித்ததற்காக நீங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்.” என்றார்.

நீ கிறிஸ்துவன் என நீ உன்னை பற்றி நினைக்கிறாயா? அது உன் மேல் திணிக்கப்பட்டது. நீ உன்னை கடவுள் என நினைக்கிறாயா? ஒரு கருத்து உன்மேல் திணிக்கப்பட்டது. சொர்க்கம் நரகம் என்பது உண்டென்று நினைக்கிறாயா? அது வேறொன்றுமில்லை, திட்டமிட்டதுதான். உன்னுள் உள்ள அனைத்தும் திட்டமிட்டதுதான்.

இயக்குநர்_தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம்.

#இயக்குநர்_தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம்.  
-----------------------------------------------
அன்பு மகனே...!
அரசியல் சூது நிறைந்த…இந்த தேசத்தில்..,
உனது எதிர்காலம் குறித்த அச்சம் தான்
இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது...!

உன்னுள்ளிருக்கும்
அன்பையும்,அறத்தையும்
காவு கேட்கின்ற காலமாக இருக்கிறது....
இந்தக் காலம்.

என் போன்ற தந்தைகளெல்லாம்,
தன் மக்களை
தற்கொலைக்குத் தப்பிய உயிராக பார்ப்பது
எத்தனை வன் கொடுமை...!

இப்போதுதான்
நீ உறுதியான நம்பிக்கையுடனும்,தெளிவுடனும்
இருக்க வேண்டும்.. மகனே...!

அவர்கள் என் நிகழ்காலத்தையும்...
உன் எதிர்காலத்தையும்
நசுக்கும் வன்மத்துடன்
காய் நகர்த்துகிறார்கள்.

இந்த சதுரங்க ஆட்டத்தில்
எண்ணிக்கையில் நமக்கு பலம் அதிகம்..
ஆனால் மகனே…!
ஒற்றுமையிலும், அதிகாரத்திலும்
அவர்களது கை ஓங்கி நிற்கிறது.

ஆட்டத்தின் விதி முறைகள்
நமக்கு மட்டும் தான்...!
அவர்கள்
எத்தனைக் கட்டம் வேண்டுமானாலும்
தாண்டி வருவார்கள்.
நம்மை வீழ்த்துதல் மட்டுமே
அவர்களது நோக்கம்...!

இங்கே வெற்றி கொள்தலை விட
நம்மை தக்க வைத்துக் கொள்தலே..முக்கியம்.
உயிர் ஆயுதம் என்ற சொல்லை
சற்று ஒதுக்கி வை மகனே...!

உனது தூக்குக் கயிற்றை
உன் கையில் கொடுத்திருக்கிறார்களே…!
அதுதான் அவர்களது சூழ்ச்சி..
நீ அதை பயன்படுத்தினால்
அவர்களுக்குத்தான் வெற்றி..!
உன் மரணத்தால்
அவர்களை வெற்றி கொள்ளச் செய்யாதே...!

அதிகாரம் என்பது சுற்றப்பட்ட பம்பரக் கயிறு...!
ஆட்சி என்பது சுழல்கின்ற பம்பரம்..!
சுழலும் ஆட்சிப் பம்பரம்
ஓர் நாள் வீழ்ந்தே தீரும்..!
காலமெலாம் சுழல்வதற்கு
இது சனாதனம் அல்ல
ஜனநாயகம்...!

சோர்ந்து போகாதே மகனே...!
சற்று பொறு.. 
ஒன்றுபடு...!

நாம் இணைந்து நின்றால்
நம் மூச்சுக்காற்றில்
அணைந்து விடக் கூடியதுதான்
அவர்களது அதிகார வெளிச்சம்..!

இது தமிழ் நிலம்
நாம் தமிழ் இனம்..
இது தவிர்த்து நம்மில்
எந்த பேதமுமில்லை..

சாதியாகவோ மதமாகவோ
யாரையும் விலக்கி வைக்காதே மகனே...!
குறிப்பாக
சங்கிகளென யாரையும் இகழாதே.. விலக்காதே...!

அவர்கள்
தங்கள் கழுத்திற்கு வரும் குறு வாளை
அணிகலன் என எண்ணி மகிழும் அப்பாவிகள்...!

தனக்காக கண்ணீர் சிந்தும்
முதலைகளை
நம்பும் ஆடுகள்...!

நீ எதை இழக்கிறாயோ?
அதைத்தான்
அவர்களும் இழக்கிறார்கள்..

உனக்கு என்ன துரோகம் இழைக்கப்படுகிறதோ?
அதே துரோகம் தான்
அவர்களுக்கும் இழைக்கப்படுகிறது.

கடவுள் என்கிற
ஒரு மந்திரச் சொல்லை உபயோகித்து
அவர்களை மயக்கி வைத்திருக்கிறார்கள்.

ஜிடிபி குறைகிறதா?
ஒரு கடவுளை சுழற்றிப் போடு..
கல்வியைக் களவாட வேண்டுமா?
மற்றொரு கடவுளை சுழற்றிப் போடு.
எதற்கும் சிக்கவில்லையென்றால்
தேசபக்தியைத் திருப்பிப் போடு.
அவர்களது ஆட்டத்தில்
கடவுளும் தேசபக்தியும்
ஒரு பகடைக் காய்….!

நமக்குத்தான்
விநாயகன், முருகன் ,
ராமர், யேசு, அல்லா….
அவர்களுக்கு கார்ப்பரேட்தான் கடவுள்.
நம் வளங்களைக்
கொள்ளை கொள்தல்தான் நோக்கம்.

நமது பண்பாடுகளையும்
பழக்க வழக்கங்களையும்
அரித்தெடுக்க போடப்பட்டிருக்கிறது.
அவர்களது மடிவலை..!

கடவுளைத் திருடுவதிலிருந்து 
காய்கறிகளை மலடாக்குவதுவரை 
யாவற்றையும் கவனத்துடன் செய்கிறார்கள்..!
இப்போது 
கல்வியை நோக்கி நீண்டிருக்கிறது 
அவர்களது ஆயுதம். 

தகுதிப்படுத்துகிறோம் என 
சொம்படிப்பார்கள் மகனே 
நம்பி விடாதே...! 
நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல..! 

ஆழத்தோண்டி தேடி எடுக்கும்
நம் பண்டைய வரலாற்றில் 
திமிறித்திமிறி மேலெழுகிறது 
நமது அறிவும், நாகரீகமும்,கட்டுமானமும்...!

அங்கு 
அவர்களது கடவுளர் இல்லை. 
இந்தத் தரவொன்று போதும் மகனே...! 
பிறப்பில் இழிவில்லை 
நாம் எவனுக்கும் அடிமையில்லை...

பதட்டம் கொள்ளாதே 
பசப்பு வார்த்தைகளில்
ஒருபோதும் மயங்காதே…

எதிரிகளின் இலக்குகளை
கவனத்தில் கொள்..
அதை
அருகிருக்கும் சகோதரனை உணரச் செய்.
ஒன்றுபடுதலும் 
உறுதி கொள்ளலும் தான்
இப்போதையத் தேவை
.
அந்த விற்பனைச் சந்தை
துவங்கி விட்டது.
வியாபாரமும்
நடந்து கொண்டிருக்கிறது.
நாம் வேடிக்கை பார்க்கும்
மனிதர்களாக இருக்கிறோம்.

நம்மில் அந்த வியாபாரத்திற்கு
முட்டுக் கொடுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

முற்று முதலாக விற்றுத் தீர்ந்தபின்..
அதை மீட்டெடுக்கும் போர்
உன் கைவசப்படலாம்..

நீ
சுழியத்திலிருந்து துவங்க நேரலாம். 
எதற்கும் கவலை கொள்ளாதே மகனே..
சுழியத்திலிருந்து துவங்கி வென்றெடுக்கலாம்.
உலகிற்கே சுழியத்தை கற்றுத் தந்தவர்கள் நாம்.

அச்சம் கொள்ளாதே...!
இந்தப் போருக்கு வேர் எது என கண்டுணர்.. 
மூலம் அறி 
அதை வேரோடு அழி

இத்தனைக்கும் காரணம்
ஒரு நூலிழைத் தவறுதான்..
சில நூற்றாண்டுகளாய் தொடர்கிறது....
அறுத்தெறிவது அத்தனை கடினமில்லை
அத்தனை எளிதுமில்ல.....

இனி யாவும் உன்கையில் 
தலைமுறைத்தவறை 
சீர் செய்யும் பொறுப்பு 
உன்னிடம் இருக்கிறது..
உறுதியாய் நின்று போராடு.. 
உயிர் தொலைக்காமல் களமாடு....!

- Thamira Kathar Mohideen