Wednesday, October 14, 2020

உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்

மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு சமர்ப்பணம்.
______________________________________________
 
பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.

"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"

அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.  அவர் சந்தோஷமாகவே இருந்தார்.  

ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார்.  கணவர் அதிர்ந்தார்.  ஆனால், மனைவி தொடர்ந்தார்.  

"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை.  என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை.  ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை.  என்னையே சார்ந்தது.  நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்."  

"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு.  அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்."  

"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.  மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.  இது ஒரு நீண்ட பட்டியல்."  

"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு.   நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.  வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை."

"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன்.  என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்."  

"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல.  நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால்.  நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."   

"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன்.  இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது.  அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.  

கைதட்டல் ஓயவே இல்லை.  

உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள்.  வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்.  உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள்.  சந்தோஷம் உள்ளே உள்ளது.  வெளியில் இல்லவே 🙅 👍🏻

என் மனதில்

எவ்வளவு ஆழ அழுந்தி புதைக்கிறாயோ
அவ்வளவு வேகத்தில் மேழெழும்கிறது சில எண்ணங்கள்.

சாமி.

Tuesday, October 13, 2020

வாழ்க்கை

வாழ்க்கை கடினமாக இருக்கிறதா
மலையின் உச்சி நோக்கி முன்னேறி சென்றுகொண்டிருக்கிறாய் அப்படித்தான் இருக்கும்.

வாழ்க்கை இலகுவாக இருக்கிறதா
உச்சியில் இருந்து கீழ் இரங்கிக் கொண்டிருக்ககூடும், பல்லத்தாக்கு கவனம்.

-எங்கோ படித்தது-

பெருந்துயரம்

துன்பங்கள் துயரங்களை சந்திக்கும் போது, அதை நம்பிக்கையுடன் பகிர நல்மனங்களை பெறாததாதுதான் 
துயரத்தில் பெருந்துயரம்.

 -சாமி.

Monday, October 12, 2020

அன்பானவர்களிடம்

சிலநேரங்களில் உதவி கேட்டு கிடைக்காதவர்களின் வலியை விட, 
கேட்டபின் கொடுக்க முடியாதவர்களின் வலி மேலோங்கி விடுகிறது.


சிறந்த நடிப்பு

மனதினில் நினைப்பு கசப்பு
அதுவே முகத்தினில் பிரதிபலிப்பு
பிறகு ஏன் வார்த்தையில் இனிப்பு.

சாமியின் சிந்தனை.

Sunday, September 27, 2020

எதுவும்_நிரந்தரமில்லை

#எதுவும்_நிரந்தரமில்லை

*உலகப்புகழ்பெற்ற #டிசைனர்.  சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்*

+"#மரணத்தை_விட_உண்மையானது_
#இந்த_உலகத்தில்_எதுவுமே_இல்லை. ! "

+  இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட்_கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது . ஆனால் நான் #சக்கர_நாற்காலியில் அழைத்து 
செல்ல படுகிறேன்.!

+  இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது.  ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.!

+  என் #வங்கி_கணக்கில் ஏராளமான பணம் கிடைக்கிறது ஆனால் எதுவும் எனக்குப்பயன் இல்லையே.!!

+  என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில்  ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன். 

+  இந்த உலகத்தில் உள்ள ஐந்து #நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.  ஆனால் மருத்துவமனையில் உள்ள #ஆய்வகங்களுக்கு  மற்றொரு #லேபிற்க்கும்  மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!

+  நான்தினசரிலட்சக்கணக்கானவர்களுக்குஆட்டோகிராப்போட்டுக்கொண்டிருந்தேன் . ஆனால் இன்று மருத்துவர்களின் பரிந்துரை தான் எனது #ஆட்டோகிராப். !

+   அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள்.  ஆனால் இன்று என் #தலையில்_முடியே இல்லை .

+  உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் #உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !

+  தனியார் #ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன்.  ஆனால் இன்று மருத்துவமனை வராந்தாவிற்கு வருவதற்கு #இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?

+   எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை.  எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால் 
சில #அன்பானவர்களின்   #முகங்களும் 
அவர்களது #தொழுதல்களும்  என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. !

பகிர்வு

#நிதர்சனம்