Thursday, October 10, 2019

மருந்துகள்

இந்த சித்தர் பாடலை எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

_மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை_

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்கு வெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனி உப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம் சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

(Disclaimer: இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான்).

ஓம் சர்வலோக சித்தர்களே போற்றி

🤔🤔🤔🤔🤔🤔

🙏🙏🙏

Saturday, October 5, 2019

How can I improve myself within a month?*

*How can I improve myself within a month?*

*_20 ideas -:_*

1. Detoxify your speech. Reduce the use of negative  words. Be polite.

2. Read everyday. Doesn’t matter what. Choose whatever interests you.

3. Promise yourself that you will never talk rudely to your parents. They never deserve it

4. Observe people around you. Imbibe their virtues.

5. Spend some time with nature everyday.

6. Feed the stray animals. Yes, it feels good to feed the hungry.

7. No ego. No ego. No ego. Just learn, learn and learn.

8. Do not hesitate to clarify a doubt. “He who asks a question remains fool for 5 minutes. He who does not ask remains a fool forever”.

9. Whatever you do, do it with full involvement. That’s meditation.

10. Keep distance from people who give you negative vibes but never hold grudges.

11. Stop comparing yourself with others. If you won’t stop, you will never know your own potential.

12. “The biggest failure in life is the failure to try”. Always remember this.

13. “I cried as I had no shoes until I saw a man who had no feet”. Never complain.

14. Plan your day. It will take a few minutes but will save your days

15. Everyday, for a few minutes, sit in silence. I mean sit with yourself. Just yourself. Magic will flow.

16. In a healthy body resides a healthy mind. Do not litter it with junk.

17. Keep your body hydrated at all times. Practice drinking water whenever thirsty.

18. Make a habit to eat at least one serving of raw vegetable salad on a daily basis.

19. Take care of your health. “He who has health has hope and he who has hope has everything”.

20. Life is short. Life is simple. Do not complicate it. Don’t forget to smile.😊🌟

_Keep reading this daily at least once and imbibe as much as possible.

*Have Happy and Healthy moments ahead. GOD Bless You*

Thursday, October 3, 2019

துன்பம்

துன்பமாக இருக்கிறீர்களா இதை படியுங்கள் <3

ஒவ்வொரு துன்பமும் புத்தருக்கான விதை - போதிதருமர்

துன்பத்தைக்கூட நன்றிப்பெருக்குடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போதிதருமர் கூறும்போது, சரியாகத்தான் கூறுகிறார்

ஏனெனில்

அதுதான் நீங்கள் புத்தர் ஆவதற்கான விதையாகும்

துன்பம் என்பது அங்கு இல்லை என்றால்

நீங்கள் ஒருபோதும் சத்தியத்தை அடைய மாட்டீர்கள்

துன்பம் தான் அதைக் கடந்து செல்வதற்கு உங்களை தூண்டிக் கொண்டே இருக்கிறது

துன்பமும் வேதனையும் தான்

அந்த துன்பம் மற்றும் வேதனையைக் கடந்து

அதற்கு அப்பால் செல்வதற்கான பாதையைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி உங்களை இறுதியாக கட்டாயப்படுத்துகிறது

பேரானந்தத்தையும் முடிவில்லா மகிழ்ச்சியையும் அடைகின்ற ஒரு வழியைக் கண்டு கொள்வதற்கு உங்களை கட்டாயப்படுத்துகிறது

துன்பத்திற்கு எதிராக இருக்காதீர்கள்

பதிலாக துன்பத்திற்கு நன்றி உணர்வு கொள்ளுங்கள் என்று போதிதருமர் கூறுகிறார்

இது ஒரு மாபெரும் கருத்து

வேதனை, துன்பம், வயதான காலம், மரணம்

ஆகியவை குறித்து நன்றி உணர்வு கொள்ளுங்கள்

ஏனெனில்

இவை அனைத்தும் மட்டுமே நீங்கள் உண்மையைத் தேடிச் செல்வதற்கான ஒரு சூழ்நிலையை உங்களுக்கு உருவாக்குகிறது

இல்லையெனில் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி விடுவீர்கள்

இல்லையெனில் நீங்கள் மிகவும் சௌகரியமானவராக

ஒரு காய்கறி போன்று ஆகிவிடுவீர்கள்

அதற்கான அவசியம் இருக்காது

துன்பம் தான் தேடுதலுக்கான அவசியத்தை உருவாக்குகிறது.

--ஓஷோ --

Tuesday, October 1, 2019

புறக்கணிப்பு

புறக்கணிப்பு <3

யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்........???

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன.......???

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா.......???

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு

நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.

அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய்.

இயற்கையை நேசி.

வலிகள் மறையும்.

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில்
நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார்.

இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை.

அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை.

அது இயல்பாய் இருக்கிறது.

அது போல் இயல்பாய் கடமையைச் செய்

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால் .
-- ஒஷோ

மனம்

நோய்களில் எழுபது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்.

ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்.

ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்.

நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்!

மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.

உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.

உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.

உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது.

சில நோய்களில் இருந்து உங்களைப் பாது காக்கிறது.

உங்கள் மனம்தான் உங்கள் உலகம்.
உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.

உங்கள் மனம்தான் உங்கள் நோய்.

நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்.

அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.

அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.

உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.

உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.

உடலும் மனமும் இரண்டல்ல.

உடலின் உள்பகுதி தான் மனம்.

உடலின் வெளிப்பகுதியே மனம்.

உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள்
நுழைய முடியும்.

அதுபோல மனத்தில்  துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்.

"மனித சாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா"!!!

#ஓஷோ
மருத்துவத்திலிருந்து
மனமற்ற நிலை வரை
உடல் மனம் ஆரோக்கியம்.

நன்றி உணர்வு

உதவியை பெறுபவர்கள் சிலர்  உடனடியாக மறந்துவிடுகின்றனர் 'RAM MEMORY'  ஐ போல,  சிலர்  மனதில் இருத்தி நன்றியுணர்வுடன் இருக்கின்றனர்  காலத்திற்கும் HARDDISK ஐ போல.
காலத்தின் கொடுமை RAM , Main memory என்றும் , HARDDISK , Secondary Memory என்றும் அழைக்கப்படுகிறது. சாமியின் சிந்தனை.

Sunday, September 29, 2019

THE PREGNANT DEER

THE PREGNANT DEER – such a beautiful story !

In a forest, a pregnant deer is about to give birth.
She finds a remote grass field near a strong-flowing river.
This seems a safe place.
Suddenly labour pains begin.

At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire.
She looks to her left & sees a hunter with his bow extended pointing at her.
To her right, she spots a hungry lion approaching her.

What can the pregnant deer do?
She is in labour!

What will happen?
Will the deer survive?
Will she give birth to a fawn?
Will the fawn survive?
Or will everything be burnt by the forest fire?
Will she perish to the hunters’ arrow?
Will she die a horrible death at the hands of the hungry lion approaching her?

She is constrained by the fire on the one side & the flowing river on the other & boxed in by her natural predators.

What does she do?
She focuses on giving birth to a new life.

The sequence of events that follows are:

– Lightning strikes & blinds the hunter.
– He releases the arrow which zips past the deer & strikes the hungry lion.
– It starts to rain heavily, & the forest fire is slowly doused by the rain.
– The deer gives birth to a healthy fawn.

In our life too, there are moments of choice when we are confronted on αll sides with negative thoughts and possibilities.

Some thoughts are so powerful that they overcome us & overwhelm us.

Maybe we can learn from the deer.
The priority of the deer, in that given moment, was simply to give birth to a baby.

The rest was not in her hands & any action or reaction that changed her focus would have likely resulted in death or disaster.

Ask yourself,
Where is your focus?
Where is your faith and hope?

In the midst of any storm, do keep faith on the Creator always. He will never ever disappoint you. NEVER.

Remember, He neither slumbers nor sleeps…