மிகுந்த இனிப்பில் எங்கோ ஒரு சிறு கசப்பு இருத்தல் போல, மிகுந்த இன்பத்தில் எங்கோ ஒரு ஒரு சிறு துன்பம் இருக்கும். சாமியின் சிந்தனை.
Tuesday, September 24, 2019
Friday, September 20, 2019
Wednesday, September 11, 2019
நீ என்னை வெறுமனே நம்பிக் கொண்டிருக்கிறாய்..... அதில் எந்த ஆழமோ, ஆர்வமோ கிடையாது,
ஆனந்தா என்பவர் கௌதம புத்தரின் சித்தப்பா மகன்.....
அவரும் புத்தரின் சீடர்களில் ஒருவர்.....
ஒரு சமயம் ஆனந்தாவிற்கு புத்தரிடம் தீட்சை எடுக்கும்படி உள்ளுணர்வு தூண்டியது.....
ஆனந்தா புத்தரைவிட வயதில் மூத்தவர்.....
ஆகவே, தீட்சை எடுப்பதற்கு முன், அவர் புத்தரிடம்
“இப்போது நான் உனக்கு அண்ணன், உன்னைவிட வயதில் மூத்தவன். நான் எதுவும் சொல்லி நீ செய்ய முடியும்.......
அதை நீ ஏற்றுக்கொண்டு நடக்கலாம். இது ஒரு பழைய சம்பிரதாயம்....
ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் உன்னிடம் தீட்சை பெறப் போகிறேன்.....
அதன் பிறகு நான் உன்னுடைய அதிகாரப்பூர்வமான சீடராகி விடுவேன்....
அதன்பிறகு இங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான சீடர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்....
ஆகவே, தீட்சை எடுப்பதற்கு முன் நான் மூன்று நிபந்தனைகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்” என்று சொல்லி.......
மேலும் அவர்,
"அந்த நிபந்தைனைகளில் முதலாவது, நான் எப்பொழுதும் உன் கூடவே இருக்க வேண்டும்....
புத்த மதத்தை பரப்பும் எந்த குழுவோடும் என்னை சேர்த்து அனுப்பக்கூடாது....
நான் உன் உடல் தேவைகள், உணவு, மருந்து போன்றவற்றை கவனித்துக்கொள்ள வேண்டும்.....
அடுத்து, நான் ஏதாவது கேட்டால், பொறுமையாக இரு, சரியான நேரம் வரட்டும் என்று சொல்லக்கூடாது. எனக்கு உடனே பதில் கூற வேண்டும்.....
அடுத்து ஒரு சிலர் உன்னை சந்திக்க வேண்டும் என்று நான் விரும்பினால், நடு இரவில் கூட அவர்களை அழைத்து வருவேன். அப்போது அவர்களை சந்திக்க மறுப்பு ஏதும் சொல்லக்கூடாது” என்றார்....
புத்தர் -
“இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. நான் உங்கள் நிபந்தனைகளை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பேன்” என்றார்....
அதைப்போல ஆனந்தா புத்தருடன் தொடர்ந்து நிழல் போல 42 வருடம் கூடவே இருந்தார்.....
அவரை கண் இமைப்போல பாதுகாத்தார்.
ஆனாலும், அவர் ஞானம் அடையவில்லை.....
அவருக்கு பிற்பாடு வந்தவர்கள் எல்லாம் ஞானம் பெற்று சென்று கொண்டிருந்தார்கள். அதனால் ஆனந்தா குழப்பம் அடைந்தார்.....
பிறகு அவர் புத்தரிடம்
“நான் என்ன தவறு செய்தேன்...???
எனக்கு பிற்பாடு வந்த பலர் ஞானம் அடைந்து குருக்களாக சென்று விட்டார்கள்.....
நான் உன் கூடவே 42 வருடம் இருக்கிறேன். எனக்கு ஞானத் தன்மையின் அ, ஆ-ன்னா கூட தெரியாது.....
இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றார்.....
அப்போது புத்தர்
‘'நான் என்றைக்கு இந்த உலகத்தை விட்டு நீங்குகிறேனோ அன்றைக்கு நீ ஞானம் அடைவாய்” என்றார்.....
மேலும் புத்தர் “இதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை.....
நீ என்னை உன் ஆழ் மனதில் இன்னமும் உன்னுடைய தம்பியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாய்.....
அது மாத்திரமல்ல, என் தம்பி என்னை ஞானம் அடைய செய்யாமல் விட மாட்டான் என்று மிகவும் நம்பிக் கொண்டு இருக்கிறாய்.....
நீ ஞானம் அடையாமல் விட்டுவிட என்னால் முடியாது.....
ஆகவே நான் சொல்வதை எல்லாம் நீ தீர்க்கமாக செய்வதில்லை.....
நீ என்னை வெறுமனே நம்பிக் கொண்டிருக்கிறாய்.....
அதில் எந்த ஆழமோ, ஆர்வமோ கிடையாது, அதற்கு நான் என்ன செய்ய முடியும்...???
நான் என் கையை மட்டும்தான் அந்த திசையை நோக்கி காட்ட முடியும்.....
உனக்காக நான் ஞான நிலையை அடைய முடியாது” என்றார்.....
புத்தர் சொன்னது போலத்தான் பிற்பாடு ஆனந்தாவிற்கு நேர்ந்தது.....
என்றைக்கு காலையில் புத்தர் இறந்தாரோ, அன்றைக்கு மாலையில் ஆனந்தா ஞானம் அடைந்தார்.....
புத்தரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது கூட ஆனந்தா கண்களை மூடி அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.....
அவர் மட்டும் அந்த தருணத்தை தவற விட்டிருந்தால் பிறகு புத்தர் போன்ற ஒரு ஞானியை அடைய எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ என்று யாருக்கு தெரியும்.....???
*#ஓஷோ*
Sunday, September 8, 2019
Sunday, September 1, 2019
காது கொடுத்து கேளுங்கள்
💜❤💙💚❤💜💙இன்றைய சிந்தனை.. ( 01.09.2019)..
……………………………………
'' காது கொடுத்து கேளுங்கள்..''..
.....................................
உங்களிடம் வந்து யாராவது தனக்கொரு பிரச்னை என்று வந்தால்.,அவர்களைப் பேசவிட்டு அவர்கள் பேசுவதை கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேளுங்கள்.
மற்றவர்களின் துன்ப துயரங்களில் ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
ஆம்.,அதுமாதிரியான நிகழ்வுகள் நமக்கும் வரலாம்.அடுத்த முறை நம்முடையதாகவும் கூட இருக்கலாம்.
ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.வளையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.
வீட்டின் பண்ணையாளரும். அவரது மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டு இருந்தார்கள்.ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப் பொறி.அதைப் பார்த்ததும எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது.,"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது..
அதற்கு அந்த கோழி,'' உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய செய்திதான்..''..நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது.,
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே செய்தியை போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு ."நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே செய்தியை சொல்லியது.
ஆடும் அதேபதிலைச் சொல்லியது.. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை..,"எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு விட்டுக்காராரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானி அம்மாளைக் கடித்து விட்டது. எஜமானி அம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.
விஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு காய்ச்சல் இறங்கவேயில்லை.
அருகில் இருந்த ஒரு மூதாட்டி.," பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு கோழி ரசம் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது ஆப்பு... கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் காய்ச்சல் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் அந்த அம்மவின் உடல் நலம் தேறியது.பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது..
பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்கு காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.எலி தப்பித்து விட்டது..
ஆம்..,நண்பர்களே..,
மற்றவர்களின் குறைகளை, அக்கறையுடன் கேளுங்கள்; ஆறுதல் சொல்லுங்கள்;
நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாலு வார்த்தை ஆதரவாக பேசுங்கள்..இன்பத்தை விட, துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு...🌺🌹💐
Thursday, August 22, 2019
இந்த உலகில் விலை மதிப்பிட முடியாத ஒரே ஒரு விஷயம் அன்பு மட்டும்தான்
" தொழிலாளி ஒருவர் இருந்தார்"!அவர் புத்தர் மீது பேரன்பு கொண்டவர்.
திடீரென்று, இரண்டு நாட்களாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
அவர் குடும்பம் பட்டினி கிடந்தது.என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.
அவரை நம்பி கடன் கொடுப்பவர்களும் யாரும் இல்லை.
மன வருத்தத்துடனும், சிந்தனையுடனும் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அருகிலிருந்த குளத்தில் ஒரு தாமரை மலர்ந்திருப்பது அவர் பார்வையில் பட்டது.
அந்த மலர், வழக்கமான தாமரை மலராக இல்லை.அபூர்வமான அழகுடன் இருந்தது.
அடர் சிவப்பு நிறத்தில் சூரிய ஒளியில் தகதகவென்று மின்னிப் பிரகாசித்தது.
அவர் குளத்தில் இறங்கி அந்த மலரைப் பறித்தெடுத்தார்.
அந்த அபூர்வ மலரை யாருக்காவது விற்றால், ஏதாவது பணம் கிடைக்கும் என்று நினைத்தார் அவர்.
அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவர் தொழிலாளியின் கையில் மிக அழகான பூ இருப்பதைப் பார்த்தார்.
அவர் கேட்டார்: "அந்த மலரை என்னிடம் விற்றுவிடுகிறாயா...???
நான் அதற்கு நூறு ரூபாய் தருகிறேன்''
சற்று நேரம் கழித்து அந்த வழியாக செல்வந்தர் ஒருவர் வந்தார்.அவரும் கேட்டார்:
"இந்த மலரை என்னிடம் விற்றுவிடுகிறாயா...???
நான் இதற்கு இருநூறு ரூபாய் தருகிறேன்...!!!''
இவ்வளவு அதிகமான விலைக்கு இந்த மலரைக் கேட்கிறார்களே, என்று
தொழிலாளிக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
சற்று நேரத்திற்குப் பிறகு
அதே வழியில் அந்த நாட்டு ராஜா வந்தார்.
தாமரை மலரைப் பார்த்து மகிழ்ந்து அவரும் கேட்டார்:
"இந்த மலரை என்னிடம் கொடுத்துவிடுகிறாயா...???
இதற்கு நான் என்ன விலை வேண்டுமானாலும் தருகிறேன்....!!!''
தொழிலாளி, ராஜாவிடம் பணிவுடன் கேட்டார்:
"வணக்கத்திற்குரிய ராஜாவே...!!!
அப்படி இந்த மலரில் என்னதான் இருக்கிறது....???
ஏன் இதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறீர்கள்......???''
ராஜா சொன்னார்:
"இந்த மலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அபூர்வமாகவும் இருக்கிறது.
இந்த நகரத்திற்குப் புத்தர் வந்திருக்கிறார்.
அவர் காலில் வைத்து வணங்குவதற்காகத்தான் இதைக் கேட்கிறேன்......!!!''
புத்தரைக் காண வேண்டும் என்று வெகுகாலமாக ஏங்கிக் கொண்டிருந்த தொழிலாளி சொன்னார்:
"அப்படியென்றால் ராஜாவே, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.....!!!
இந்த மலரை நானே அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்''
அந்தத் தொழிலாளி ஓடிச் சென்றார்.அரிய தாமரை மலரை புத்தரின் காலடியில் வைத்து வணங்கி நின்றார்.ண
அப்போது புத்தர் கனிவாக அவரிடம் கேட்டார்:
"சகோதரா இந்த மலரை நீ ராஜாவிற்கு விற்றிருந்தாயானால்,நீ மட்டுமின்றி உன் பல தலைமுறைகளும் வளமாக வாழ்வதற்கான செல்வம் உனக்குக் கிடைத்திருக்குமே...!!!
நீ ஏன் அப்படிச் செய்யவில்லை...???''
தொழிலாளி கண்கலங்கிச் சொன்னார்: "ஐயா... உலகின் ஞானியே,நான் இந்த மலரைப் பறித்தபோது இது ஒரு தாமரை மலராக மட்டுமாகத்தான் இருந்தது.
ஆனால்,நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்தபோது,இந்த மலர் என் இதயத்தின் அன்பாக மாறிவிட்டது.
என் இதயத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற இடம் உங்கள் காலடிகளைத் தவிர வேறு இல்லையே....!!!''
புத்தர் எழுந்து அவரைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சொன்னார்:
"இனிய சகோதரா...
வறுமையில் இருந்தாலும்
இந்த உலகத்தின் அரசன் நீதான்.நிம்மதியாகப் போ
உன் வாழ்க்கை வளமாகும்''
தூய அன்பிற்கு முன்னால் பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை!!!
இந்த உலகில் விலை மதிப்பிட முடியாத ஒரே ஒரு விஷயம் அன்பு மட்டும்தான்!!!
Saturday, August 17, 2019
*Just Loved these lines*_ _" When I got enough confidence, the stage was gone….. When I was sure of Losing, I won……. When I needed People the most, they Left me……. When I learnt to dry my Tears, I found a shoulder to Cry on…… When I mastered the Skill of Hating, Someone started Loving me from the core of the Heart…… And, while waiting for Light for Hours when I fell asleep, the Sun came out….. That’s LIFE!! No matter what you Plan, you never know what Life has Planned for you…… Success introduces you to the World……. But Failure introduces the World to you……. ……Always be Happy!! Often when we lose Hope and think this is the end… God smiles from above and says, “Relax Sweetheart; It’s just a Bend, not the End..!"_ 🤗😊😍
*Just Loved these lines*_
_" When I got enough confidence, the stage was gone….. When I was sure of Losing, I won……. When I needed People the most, they Left me……. When I learnt to dry my Tears, I found a shoulder to Cry on…… When I mastered the Skill of Hating, Someone started Loving me from the core of the Heart…… And, while waiting for Light for Hours when I fell asleep, the Sun came out….. That’s LIFE!! No matter what you Plan, you never know what Life has Planned for you…… Success introduces you to the World……. But Failure introduces the World to you……. ……Always be Happy!! Often when we lose Hope and think this is the end… God smiles from above and says, “Relax Sweetheart; It’s just a Bend, not the End..!"_
🤗😊😍