ஆனந்தா என்பவர் கௌதம புத்தரின் சித்தப்பா மகன்.....
அவரும் புத்தரின் சீடர்களில் ஒருவர்.....
ஒரு சமயம் ஆனந்தாவிற்கு புத்தரிடம் தீட்சை எடுக்கும்படி உள்ளுணர்வு தூண்டியது.....
ஆனந்தா புத்தரைவிட வயதில் மூத்தவர்.....
ஆகவே, தீட்சை எடுப்பதற்கு முன், அவர் புத்தரிடம்
“இப்போது நான் உனக்கு அண்ணன், உன்னைவிட வயதில் மூத்தவன். நான் எதுவும் சொல்லி நீ செய்ய முடியும்.......
அதை நீ ஏற்றுக்கொண்டு நடக்கலாம். இது ஒரு பழைய சம்பிரதாயம்....
ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் உன்னிடம் தீட்சை பெறப் போகிறேன்.....
அதன் பிறகு நான் உன்னுடைய அதிகாரப்பூர்வமான சீடராகி விடுவேன்....
அதன்பிறகு இங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான சீடர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்....
ஆகவே, தீட்சை எடுப்பதற்கு முன் நான் மூன்று நிபந்தனைகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்” என்று சொல்லி.......
மேலும் அவர்,
"அந்த நிபந்தைனைகளில் முதலாவது, நான் எப்பொழுதும் உன் கூடவே இருக்க வேண்டும்....
புத்த மதத்தை பரப்பும் எந்த குழுவோடும் என்னை சேர்த்து அனுப்பக்கூடாது....
நான் உன் உடல் தேவைகள், உணவு, மருந்து போன்றவற்றை கவனித்துக்கொள்ள வேண்டும்.....
அடுத்து, நான் ஏதாவது கேட்டால், பொறுமையாக இரு, சரியான நேரம் வரட்டும் என்று சொல்லக்கூடாது. எனக்கு உடனே பதில் கூற வேண்டும்.....
அடுத்து ஒரு சிலர் உன்னை சந்திக்க வேண்டும் என்று நான் விரும்பினால், நடு இரவில் கூட அவர்களை அழைத்து வருவேன். அப்போது அவர்களை சந்திக்க மறுப்பு ஏதும் சொல்லக்கூடாது” என்றார்....
புத்தர் -
“இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. நான் உங்கள் நிபந்தனைகளை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பேன்” என்றார்....
அதைப்போல ஆனந்தா புத்தருடன் தொடர்ந்து நிழல் போல 42 வருடம் கூடவே இருந்தார்.....
அவரை கண் இமைப்போல பாதுகாத்தார்.
ஆனாலும், அவர் ஞானம் அடையவில்லை.....
அவருக்கு பிற்பாடு வந்தவர்கள் எல்லாம் ஞானம் பெற்று சென்று கொண்டிருந்தார்கள். அதனால் ஆனந்தா குழப்பம் அடைந்தார்.....
பிறகு அவர் புத்தரிடம்
“நான் என்ன தவறு செய்தேன்...???
எனக்கு பிற்பாடு வந்த பலர் ஞானம் அடைந்து குருக்களாக சென்று விட்டார்கள்.....
நான் உன் கூடவே 42 வருடம் இருக்கிறேன். எனக்கு ஞானத் தன்மையின் அ, ஆ-ன்னா கூட தெரியாது.....
இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றார்.....
அப்போது புத்தர்
‘'நான் என்றைக்கு இந்த உலகத்தை விட்டு நீங்குகிறேனோ அன்றைக்கு நீ ஞானம் அடைவாய்” என்றார்.....
மேலும் புத்தர் “இதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை.....
நீ என்னை உன் ஆழ் மனதில் இன்னமும் உன்னுடைய தம்பியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாய்.....
அது மாத்திரமல்ல, என் தம்பி என்னை ஞானம் அடைய செய்யாமல் விட மாட்டான் என்று மிகவும் நம்பிக் கொண்டு இருக்கிறாய்.....
நீ ஞானம் அடையாமல் விட்டுவிட என்னால் முடியாது.....
ஆகவே நான் சொல்வதை எல்லாம் நீ தீர்க்கமாக செய்வதில்லை.....
நீ என்னை வெறுமனே நம்பிக் கொண்டிருக்கிறாய்.....
அதில் எந்த ஆழமோ, ஆர்வமோ கிடையாது, அதற்கு நான் என்ன செய்ய முடியும்...???
நான் என் கையை மட்டும்தான் அந்த திசையை நோக்கி காட்ட முடியும்.....
உனக்காக நான் ஞான நிலையை அடைய முடியாது” என்றார்.....
புத்தர் சொன்னது போலத்தான் பிற்பாடு ஆனந்தாவிற்கு நேர்ந்தது.....
என்றைக்கு காலையில் புத்தர் இறந்தாரோ, அன்றைக்கு மாலையில் ஆனந்தா ஞானம் அடைந்தார்.....
புத்தரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது கூட ஆனந்தா கண்களை மூடி அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.....
அவர் மட்டும் அந்த தருணத்தை தவற விட்டிருந்தால் பிறகு புத்தர் போன்ற ஒரு ஞானியை அடைய எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ என்று யாருக்கு தெரியும்.....???
*#ஓஷோ*